கறுப்புக் கொடிக்கு திரண்டதை விட அதிகக் கூட்டம்! : எல்லாம் சமந்தாவைப் பார்க்கத்தான்..!

samantha prabhu redhills chennai - 2026

சென்னை: காவிரிக்காகவும் ஐபிஎல்.,லுக்காகவும் திரண்ட கூட்டத்தை விடவும் அதிகமான அளவில் நடிகை சமந்தாவைப் பார்க்க ரசிகர் கூட்டம் கூடி ஆச்சரியப் படுத்தியுள்ளது.

நடிகை சமந்தா, தமிழ்த் திரையுலகில் குறைந்த படங்களே நடித்திருந்தாலும், தமிழக ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்றவர். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் நாக சைதன்யாவுடன் திருமணம் நடந்தது. தனது திருமணத்திற்குப் பின் முதன் முறையாக சென்னை செங்குன்றம் வந்தார் நடிகை சமந்தா. அவரைக் காண திரளான ரசிகர்கள் கூடியதால் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.

நாக சைதன்யாவுடன் நடைபெற்ற திருமணத்திற்குப் பின்னும் சமந்தா, நடிப்புப் பணியை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று செங்குன்றத்தில் ஒரு ஷாப்பிங் மால் திறப்பு விழாவில் கலந்து கொள்ள செங்குன்றம் வந்திருந்தார் சமந்தா அவர் வருவதை சற்று முன்னர்தான் அறிந்துகொண்டனர் இளைஞர்கள். இதை அடுத்து அங்கே இளைஞர்கள் பெருமளவில் திரளத் தொடங்கினர். சமந்தா வருவது குறித்த தகவல் வெளியான நிலையில், முன்கூட்டியே உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இளைஞர் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர்.

பிரதான சாலையின் இரு புறங்களிலும், வளாக வாயிலிலும் ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். இதை அடுத்து ஏராளமான தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சமந்தாவைக் கண்டதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர், கடும் நெரிசல்களுக்கு இடையே நடிகை சமந்தா பாதுகாப்பாக அந்த வளாகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார். ஏராளமானோர் சமந்தாவை செல்போனில் போட்டோ எடுத்தனர்.

சமந்தாவைக் காண்பதற்கு தொடர்ந்து கூட்டம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் செங்குன்றம் – சென்னை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை அடுத்து போக்குவரத்து போலீசார் அழைக்கப்பட்டனர். அதன்பின்னரே போக்குவரத்து மீண்டும் சீரானது.

கடந்த வாரம் சென்னையில் நடந்த ஐபிஎல்., எதிர்ப்புக் கூட்டத்தை விடவும், மோடிக்கு கறுப்புக் கொடி காட்ட பல்வேறு கட்சிகள் திரட்டிய கூட்டத்தை விடவும், சமந்தாவைக் காண்பதற்கு தானாக அதுவும் குறுகிய நேரத்தில் கூடிய கூட்டம் மிக அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories