
லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 50 க்கும் மேற்பட்டோர் சோதனை மேற்கொண்டனர். முறைகேடாக கேபிள் டீவி இணைப்புகள் இருப்பதாக வந்த புகாரை அடுத்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு கேபிள் டீவி அலுவலகத்தில் சோதனை நடத்தப் பட்டது.
1000 கேபிள் இணைப்பு வைத்திருக்கும் ஆப்ரேட்டர் கூட வெறும் 100 இணைப்புக்கு தான் பணம் கட்டுவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.


