January 25, 2025, 1:55 AM
24.9 C
Chennai

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு சாகும் வரை சிறை!

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு அவர் சாகும் வரை சிறைத் தண்டனை அளித்து தஞ்சாவூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சிவகொள்ளைப் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருக்கு மன வளர்ச்சி குன்றிய நிலையில் பெண் குழந்தை இருந்துள்ளது. இவர் பின்னர், மன வளர்ச்சி குன்றிய தன் மகளை தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தந்தையின் மூலமாக அவரது மகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

தமிழகம் முழுவதும் இந்தச் செய்தி அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மகளை வன்கொடுமை செய்ததாக சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போக்சா சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த தஞ்சை மகளிர் நீதிமன்றம், இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.

ALSO READ:  16 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் செல்போனில் சமூகத் தளங்கள் பயன்படுத்த தடை! எங்கே தெரியுமா?

அதன்படி சுப்பிரமணிக்கு 4 ஆயுள் தண்டனைகள் விதித்து, அவர் சாகும்வரை சிறைத் தண்டனை அனுபவிக்கும்படி தீர்ப்பு அளித்தது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

சிவபதம் – ‘சிதம்பரம் நடராஜ கீர்த்தனைகள்’ நூல் வெளியீடு!

ஆக, ஆக… இப்பணி, தில்லையம்பலத்தான் திருவடிக்கு, இந்த ஸ்ரீராமானுஜ தாஸன் செய்த சிறுதொண்டு!