மணல் கொள்ளையைத் தடுத்த காவலர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம்: 2 பேர் கைது!

policeman murder sand mafia - 2026

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற காவலர் ஜெகதீசன் அடித்துக் கொலை செய்யப் பட்ட விவகாரத்தில் தொடர்புடையதாக 2 பேரை கைதுக் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாங்குநேரி அருகே சிந்தாமணிப் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் துரை தெற்கு விஜயநாராயணம் காவல் நிலையத்தில் எஸ்.பி.யின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பாண்டிச்சேரி கிராமம் அருகே உள்ள நம்பியாற்றுப் பகுதியில் இரவு நேரத்தில் சிலர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக காவல் நிலையத்துக்கு புகார் வந்துள்ளது.

இதை அடுத்து, நேற்றிரவு நம்பியாற்றுப் பகுதிக்கு காவலர் ஜெகதீஷ் துரை ரோந்து பணிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கே டிராக்டர் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களை காவலர் ஜெகதீஷ் கண்டித்ததுடன், அவர்களை கைது செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மணல் கொள்ளையர்கள், இரும்பு கம்பியால் காவலர் ஜெகதீஷ் துரையின் தலையில் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர். கடுமையாகத் தாக்குதலுக்கு ஆளான ஜெகதீஷ் துரை ரத்த வெள்ளத்தில் சரிந்து, அதே இடத்தில் துடி துடித்து உயிரிழந்துள்ளார்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

இரவு ரோந்துப் பணிக்கு சென்ற காவலர் காலை வரை காவல் நிலையம் வரவில்லை என்பதால், சக காவலர்கள் நம்பியாறு பகுதிக்குச் சென்று தேடிய போது, அங்கே காவலர் ஜெகதீஷ் சடலமாகக் கிடந்ததைக் கண்டுள்ளனர். இதன் பின் அவரது உடலை மீட்ட போலீசார், நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதை அடுத்து அங்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்.பி. அருண்சக்தி குமார், அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.

தொடந்து கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், கக்கன் நகரைச் சேர்ந்த முருகன், மாடசாமி ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து, அந்த கும்பலில் இருந்து தப்பியோடிய கூட்டாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories