December 5, 2025, 3:45 PM
27.9 C
Chennai

தனிக்கட்சி; பாஜக.,வுடன் கூட்டணி: ரஜினியின் ‘ஆன்மிக அரசியல்’ திட்டம்!

rajini makkal mandram - 2025

பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக் கொள்வது தொடர்பாக, ரஜினி இளைஞர் அணி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

நடிகர் ரஜினிகாந்த் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துக்கொள்வது தொடர்பாக தனது மக்கள் மன்றத்தின் இளைஞரணி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். ரஜினிகாந்த் இன்று தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளை நேரில் சந்திப்பதற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி இன்று காலை சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு வந்திருந்தனர்.

வந்தவர்களிடம் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட பிறகு, அனைவரும் வேனில் ஏற்றிக் கொள்ளப் பட்டு நேராக போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவரது வீட்டில் இளைஞரணி நிர்வாகிகளிடம் ரஜினி பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆலோசனை முடிந்து வெளியில் வந்த நிர்வாகிகள் இதுகுறித்துக் குறிப்பிடுகையில், “பாஜக., கூட்டணி தொடர்பாகப் பேசியதாகவும், கூட்டணி குறித்துக் கூறிய போது, சிலர் சிறுபான்மை மக்கள் ஆதரவு பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில், மன்றத்தின் நிர்வாகிகளுக்கும், இளைஞரணி நிர்வாகிகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், ஆன்மிக அரசியல் என்று வந்துவிட்டாலே, சிறுபான்மையினர் ஆதரவு நிச்சயம் இருக்காது என்றும், சிறுபான்மையினர் தங்களுக்குள் தனித் தனிக் கட்சிகளை வைத்துக் கொண்டு, மதத் தலைமை சொல்படி கேட்பதால், சிறுபான்மையினர் ஆதரவு என்ற ஒன்றையே நினைத்துக் கொண்டிருப்பது தேவையற்றது என்றும் சிலர் கூறியதாகத் தெரிகிறது.

எனவே தனிக்கட்சி தொடங்கி பாஜக.,வுடன் கூட்டணி வைத்து வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடலாம் என்பதை சிலர் பரிந்துரைத்துள்ளனர். அதே நேரம், ரஜினியின் ஆன்மிக அரசியல் என்ற பேச்சு எழுந்த பிறகு, ரஜினிக்கு சமூக வலைத்தளங்களிலும், அரசியல் ரீதியாகவும் பொதுவெளியில் பலரும் மோசமான வார்த்தைகளால் திட்டித் தீர்ப்பது அந்த கூட்டணி அச்சத்தின் காரணத்தால்தான் என்பதை முழுமையாக நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், பாஜக.,வையும் ரஜினியையும் ஒருசேர எதிர்ப்பவர்களின் மன நிலை அந்த அச்ச உணர்வுதான் என்பதையும் ஓரிருவர் எடுத்துக் கூறியுள்ளனர்.

இதை அடுத்து,  எந்தப் பிரச்னையும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும், 35 ஆண்டுகள் 6 மாதம் வயது ஆன ஒருவர் மட்டுமே ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞரணியில் உறுப்பினராக இருக்க முடியும் என்றும் கூறப்பட்டது.

தொடர்ந்து, மாணவர்கள், மக்கள் மன்றத்தில் இணைய வேண்டும் எனக் கேட்கிறார்களே என்று ரஜினியிடம் யோசனை கேட்டபோது, அதற்கு அவர், மாணவர்களை உறுப்பினராக இணையுங்கள். ஆனால் களப் பணியில் ஈடுபடுத்தாதீர்கள். அவர்களின் படிப்பு வீணாகப் போய்விடக் கூடாது’ என்று கூறினாராம்.

இந்தக் கூட்டத்தில், ரஜினி மக்கள் மன்றத்தின் இளைஞரணிக்கு மாநில நிர்வாகிகளை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மக்கள் மன்றம் என்பது வேறு; கட்சி என்பது வேறு. மன்றத்தில் சிறப்பாகப் பணிபுரியும் நிர்வாகிகளையே கட்சியையும் நிர்வகிக்க அனுமதிக்கப்படுவார்கள்’’ என்று இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories