December 5, 2025, 4:50 PM
27.9 C
Chennai

நீட் தேர்வை வைத்து பிண அரசியல் நடத்தாதீர்கள்: திமுக., உள்ளிட்ட கட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு

16 June03 high court - 2025

சென்னை: நீட் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களின் தற்கொலையை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என திமுக., உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மறைமுகமாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவர் கடந்த ஆண்டு  தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு தோல்வியால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்வுக்கு முன்பாக உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை சென்ற ஆண்டு பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. நீட் தேர்வுக்காக இலவசப் பயிற்சி மையம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழக அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்தார். நீட் தேர்வு தொடர்பாக சென்ற ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்ற வில்லை என்றும், அதனால் தான் இந்த ஆண்டும் மாணவிகள் இரண்டு பேர் தற்கொலை செய்ததாகவும் அவர்  அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மாணவர்களுக்கு நீட் தேர்வு தொடர்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதையும், தேர்வுகளை மாணவர்கள் எளிதாக அணுக அரசு படிப்படியாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதையும் தெரிவித்தார். மேலும், இவற்றைக் கடந்து எதிர்பாராத விதமாக தற்கொலை சம்பவம் நடைபெறுவதால், அதற்கு அரசு தான் காரணம் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி கிருபாகரன், மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார். மாணவர்களுக்கு முன் கூட்டியே அறிவுரை வழங்காமல், இறந்த பிறகு கண்ணீர் வடிப்பது தேவையற்றது; மாணவர்கள் தற்கொலை சம்பவங்களுக்கு அரசை மட்டும் குறை சொல்லக் கூடாது. இதைத் தடுக்க வேண்டியது சமுதாயத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு என்று கூறினார்.

தொடர்ந்து, இந்த  மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories