நீட் தேர்வை வைத்து பிண அரசியல் நடத்தாதீர்கள்: திமுக., உள்ளிட்ட கட்சிகளுக்கு உயர் நீதிமன்றம் கண்டிப்பு

16 June03 high court - 2026

சென்னை: நீட் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களின் தற்கொலையை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என திமுக., உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு மறைமுகமாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருத்திகா என்பவர் கடந்த ஆண்டு  தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு தோல்வியால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்வுக்கு முன்பாக உரிய பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை சென்ற ஆண்டு பிறப்பித்திருந்தார். அதன் அடிப்படையில் தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. நீட் தேர்வுக்காக இலவசப் பயிற்சி மையம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழக அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்தார். நீட் தேர்வு தொடர்பாக சென்ற ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்ற வில்லை என்றும், அதனால் தான் இந்த ஆண்டும் மாணவிகள் இரண்டு பேர் தற்கொலை செய்ததாகவும் அவர்  அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மாணவர்களுக்கு நீட் தேர்வு தொடர்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதையும், தேர்வுகளை மாணவர்கள் எளிதாக அணுக அரசு படிப்படியாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதையும் தெரிவித்தார். மேலும், இவற்றைக் கடந்து எதிர்பாராத விதமாக தற்கொலை சம்பவம் நடைபெறுவதால், அதற்கு அரசு தான் காரணம் என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி கிருபாகரன், மாணவர்களின் தற்கொலை சம்பவங்களை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என அரசியல் கட்சித் தலைவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார். மாணவர்களுக்கு முன் கூட்டியே அறிவுரை வழங்காமல், இறந்த பிறகு கண்ணீர் வடிப்பது தேவையற்றது; மாணவர்கள் தற்கொலை சம்பவங்களுக்கு அரசை மட்டும் குறை சொல்லக் கூடாது. இதைத் தடுக்க வேண்டியது சமுதாயத்தில் உள்ள அனைவரின் பொறுப்பு என்று கூறினார்.

தொடர்ந்து, இந்த  மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories