வீரவாஞ்சி நினைவு தினம்! பிராமண சங்கத்தினர் வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

Published:

vanchi statue2 - 2026

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 107 வது நினைவு தினம் இன்று காலை 10.31க்கு அனுசரிக்கப் பட்டது.

இதை முன்னிட்டு செங்கோட்டை நகர பிராமண சங்கத்தின் சார்பில் வாஞ்சி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்வுக்காக மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வேன்களில் பிராமண சங்கத்தினர் வந்திருந்து வாஞ்சியின் நினைவைப் போற்றி கோஷங்கள் எழுப்பியதுடன், வாஞ்சி சிலைக்கு மாலைகளை அணிவித்தனர்.

vanchi statue3 - 2026

பிராமணர் சங்க மாநில மூத்த பொதுச் செயலாளர் வி.ஜெகந்நாதன், மதுரை மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணசுவாமி, தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் ஸ்ரீபதி ராமநாராயணன், குமரி மாவட்ட தலைவர் சீதாராமன் ஆகியோருடன் திரளாக மகளிர் அமைப்பினரும் வந்திருந்து வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

vanchinatan statue - 2026

நெல்லை மாவட்ட தலைவர் ஏ.சிவக்குமார், நெல்லை மாவட்ட பொதுச் செயலர் ஆர்.சுப்ரமணியன், பொருளாளர் என்.ஐயப்பன், அமைப்புச் செயலர் கே.சீனிவாசன், துணைத் தலைவர் எம்.ராமசுவாமி, பேட்டை கிளை தலைவர் ஆர்.பரமேஸ்வரன், நாராயணம்மாள்புரம் கிளை தலைவர் என்.எஸ்.சங்கரன், சி.என்.கிராமம் கிளை தலைவர் வேங்கடசுப்பிரமணியம், என்.ஜி.ஓ.காலனி கிளை தலைவர் ஹெச்.ஏ.சர்மா, தியாகராஜநகர் கிளை தலைவர் பி.பி. சுந்தரேசன், மேலகரம் கிளை தலைவர் டி.குளத்துமணி மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்து, வாஞ்சி மணி மண்டபத்தில் நினைவஞ்சலி செலுத்தினர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img