எஸ்.வி.சேகருக்கு ஜாமின்! ஜூலை 18ல் ஆஜராக உத்தரவு!

sveshekhar - 2026

சென்னை: பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த ஒருவரின் கருத்தை பேஸ்புக்கில் பார்வர்ட் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் எஸ்வி சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் என்பவர், பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து எழுந்து செல்லும் நேரத்தில் ஆளுநரிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்க, அவர் நல்ல கேள்வி என்று சொல்லி கன்னத்தில் லேசாகத் தட்டினார். அது சம்பவத்தில் தொடர்புடைய பத்திரிகையாளர் புகாராக சமூக வலைத்தளங்களில் பகிரப் பட, தொடர்ந்து பிரச்னை ஆனது. இந்நிலையில், சில பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி ஒருவர் பதிவு செய்திருந்த கருத்தை எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், தான் படிக்காமல் பகிர்ந்ததாகவும், அது தவறு என உணர்ந்ததும் உடனே அதை நீக்கியதாகவும் கூறி மன்னிப்பும் கோரினார்.

இருப்பினும் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் மூலம் வழக்கு பதிவு செய்யப் பட்டது. உடனே எஸ்வி.சேகர் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமின் வழங்கவில்லை. அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமின் கோரினார். அது குறித்த விசாரணையில் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்து, அவரைக் கைது செய்ய தடை இல்லை என்று கூறியது.

svesekar house attacl - 2026

இதனிடையே, நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் எஸ்.வி.சேகர் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். எஸ்.வி.சேகரை கைது செய்யக் கோரி முன்னர் பத்திரிகையாளர்கள் என சிலர் எஸ்.வி.சேகர் வீடு மீது கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். எனவே அவ்வாறு ஏதும் அசம்பாவிதம் நேர்ந்துவிடக் கூடாது என்பதால், நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

நீதிமன்றத்தில் ஆஜரான எஸ்.வி.சேகருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம், மீண்டும் அவர் ஜூலை 18 ஆம் தேதி ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories