February 21, 2026, 7:17 PM
29 C
Chennai

எஸ்.வி.சேகருக்கு ஜாமின்! ஜூலை 18ல் ஆஜராக உத்தரவு!

sveshekhar - 2026

சென்னை: பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த ஒருவரின் கருத்தை பேஸ்புக்கில் பார்வர்ட் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் எஸ்வி சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.

சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன் என்பவர், பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்து எழுந்து செல்லும் நேரத்தில் ஆளுநரிடம் தொடர்ந்து கேள்விகள் கேட்க, அவர் நல்ல கேள்வி என்று சொல்லி கன்னத்தில் லேசாகத் தட்டினார். அது சம்பவத்தில் தொடர்புடைய பத்திரிகையாளர் புகாராக சமூக வலைத்தளங்களில் பகிரப் பட, தொடர்ந்து பிரச்னை ஆனது. இந்நிலையில், சில பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி ஒருவர் பதிவு செய்திருந்த கருத்தை எஸ்.வி.சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், தான் படிக்காமல் பகிர்ந்ததாகவும், அது தவறு என உணர்ந்ததும் உடனே அதை நீக்கியதாகவும் கூறி மன்னிப்பும் கோரினார்.

இருப்பினும் பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் மூலம் வழக்கு பதிவு செய்யப் பட்டது. உடனே எஸ்வி.சேகர் முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமின் வழங்கவில்லை. அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமின் கோரினார். அது குறித்த விசாரணையில் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்து, அவரைக் கைது செய்ய தடை இல்லை என்று கூறியது.

svesekar house attacl - 2026

இதனிடையே, நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் எஸ்.வி.சேகர் இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். எஸ்.வி.சேகரை கைது செய்யக் கோரி முன்னர் பத்திரிகையாளர்கள் என சிலர் எஸ்.வி.சேகர் வீடு மீது கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். எனவே அவ்வாறு ஏதும் அசம்பாவிதம் நேர்ந்துவிடக் கூடாது என்பதால், நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.

நீதிமன்றத்தில் ஆஜரான எஸ்.வி.சேகருக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம், மீண்டும் அவர் ஜூலை 18 ஆம் தேதி ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories