அதிகாரிகள் நெருக்கடி: ஊராட்சி ஒன்றிய பணியாளர் தீக்குளிப்பு?

திருவாரூர்: திருவாரூர் அருகே அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக, ஊராட்சி ஒன்றியப் பணியாளர், பணியிட மாற்றம் கிடைக்காமல் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். திருவாரூர் அருகே உள்ள அம்மையம்மன் கிராமம் உப்புக்காரத் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன்(38). இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓவர்சியராக வேலை செய்து வந்த இவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டில் இருந்தார். மாலை 4 மணி அளவில் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள வயல் பகுதிக்குச் சென்று, திடீரென தன் உடம்பில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அருகில் இருந்தோர் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இது குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அப்போது முத்துக்கிருஷ்ணன் தனக்கு பணியிட மாறுதல் கேட்டதாகவும், பணியிட மாறுதல் கிடைக்காததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. முத்துகிருஷ்ணன் கடந்த 6 மாதத்திற்குமுன் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் வரைவாளராக வேலை செய்து வந்தார். அங்கு பணியிலிருந்த செயற்பொறியாளர் செந்தில்குமார் என்பவரின் நெருக்கடி காரணமாக, நன்னிலம் ஒன்றிய அலுவலகத்திற்கு பணிஇட மாறுதல் பெற்றுச் சென்றார். அங்கே சென்ற பிறகும் செயற்பொறியாளர் செந்தில்குமாரின் நெருக்கடி தொடர்ந்து நீடித்து வந்ததாகவும், இதனால்தான் அவர் தற்கொலையில் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. இதுகுறித்து நன்னிலம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானகிருஷ்ணனிடம் கேட்டபோது, முத்துகிருஷ்ணன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 20 நாட்களுக்கு மேலாக விடுமுறையில் இருந்து வந்ததாகவும், கடந்த 30ம்தேதிதான் பணியில் சேர்ந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் முத்துக்கிருஷ்ணன் பணியிட மாறுதல் கோரி எந்த விண்ணப்பமும் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் முத்துக்கிருஷ்ணனின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories