சென்னை: சென்னை ஆவடியில் மத்திய அரசுப் பணிக்கான எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, ஆவடியில் மத்திய அரசின் கனரக வாகனத் தொழிற்சாலை – எச்.வி.எஃப்பில் டெக்னீசியன்கள் மற்றும் கடைநிலை ஊழியர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்களின் கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. இதில் பெரும்பாலானவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்த எழுத்துத் தேர்வில் 500க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் செய்முறைத் தேர்வு ஆவடி தொழிற்சாலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில், சான்றிதழ் சரிபார்ப்பு அதிகாரி ஒவ்வொருவரின் சான்றிதழ்களையும் சரிபார்த்தார். அப்போது, எழுத்துத் தேர்வில் பதிவு செய்யப்பட்ட கைரேகைகளையும், சான்றிதழ் சரிபார்க்க வந்தவர்களின் கைரேகைகளையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ்குமார் (30), பிரபாத்குமார் (26), சந்தன்குமார் (23) ஆகியோரின் கைரேகைகள் பொருந்தவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆவடி டேங்க் பேக்டரி காவல் உதவி ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Less than 1 min.Read
மத்திய அரசுப் பணி எழுத்துத் தேர்வில் ஆள்மாறாட்டம்: வடமாநில இளைஞர்கள் 3 பேர் கைது
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உலகம்
டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!
9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
கட்டுரைகள்
தமிழ்த் தாயைக் காத்த தனயன்
ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உலகம்
டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!
9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
கட்டுரைகள்
தமிழ்த் தாயைக் காத்த தனயன்
ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
மதுரை
மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
விளையாட்டு
T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!
இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

