ஆடிப்பூர விழாவுக்கு வாங்க… அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்த சித்தர் பீடம்!

Published:

 

melmaruvathur peetam amitsha - 2026
தமிழகம் வருகை தந்த பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மாவின் ஆன்மீக குரு பங்காரு அடிகளாரின் இளைய புதல்வர் செந்தில்குமார், வரும் ஆடிப்பூர நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். அருகில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

சென்னை: ஆடிப்பூர விழாவுக்கு மேல்மருவத்தூருக்கு வருமாறு பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு சித்தர் பீடத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள மேல்மருவத்தூர் பிரபலமான தலமாக விளங்குகிறது. இங்குள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

இங்கே ஆடி மாதம் நடைபெறும் பூர விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. பெருமளவிலான பக்தர்கள் வருகை தரும் அந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு சென்னைக்கு வந்திருந்த பாஜக., தேசியத் தலைவர் அமித்ஷாவிடம் சித்தர் பீடத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் நேற்று அமித்ஷாவை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

அடுத்த மாதம் ஆடிப்பூர விழா கொண்டாடப் படுகிறது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img