December 5, 2025, 3:13 PM
27.9 C
Chennai

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலைகள், தூண்கள் மாயம்: 6 பேர் மீது வழக்கு பதிவு!

eakambaranathar temple - 2025

சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் சிலைகள், தூண்கள் மாயமானது குறித்து கோயில் நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில் இரட்டை திருமாளிகையில் உள்ள சிலைகள், தூண்கள் மாயமானது குறித்து கோயில் நிர்வாகிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய சிவகாஞ்சி போலீசாருக்கு காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

காஞ்சிபுரத்தில் உள்ளது ஏகாம்பரநாதர் திருக்கோவில். இது, நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோவில். இக்கோயிலில் சிதிலமடைந்த நிலையில் உள்ள இரட்டை திருமாளிகையை புதுப்பிக்க, கடந்த 2012 -ஆம் ஆண்டு ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணிகள் தொடங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது.

மன்னர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கல் தூண்கள் மாற்றப் பட்டிருந்தன. நுண்ணிய வேலைப்பாடு மிகுந்த சிவன், பார்வதி, விநாயகர், முருகன் கற்சிலைகள் மாயமான நிலையில், சில தூண்களுமே காணாமல் போயின. இவை கடத்தப்பட்டதாக டில்லிபாபு என்பவர் சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தார். ஆனால் அதன் மீது வழக்குப்பதிவு செய்யப்படாததால், டில்லிபாபு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மீனாட்சி, கூடுதல் திருப்பணி ஆணையர் கவிதா, இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி, கோயில் செயல் அலுவலர் முருகேசன், கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்பிரமணியம், ஸ்தபதி நந்தகுமார் ஆகிய 6 பேர் மீது சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories