குற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்… நீண்ட வரிசை! நிம்மதி இல்லை!

courtallam jul22 - 2026

நெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் பிரதான அருவியில் இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ஆண்கள் பகுதியில் காலை நேரத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. ஆனால் பெண்கள் பகுதியில் நீண்ட வரிசை காத்திருந்தது.

அருவிக்கு, குற்றால நாதர் கோயில் பகுதியில் இருந்து செல்லும் பாலத்தில் நின்ற பெண்கள் வரிசை, வாகன நிறுத்துமிடம் வரை சென்றது. தாங்கள் வெகு நேரம் காத்திருப்பதாக பெண்கள் குறைப்பட்டுக் கொண்டனர். பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் தங்கும் விடுதிகளில் இருந்ததாகவும், அப்போது தங்களுடன் வந்த ஆண்கள் இரவிலேயே அருவிக்குச் சென்று குளித்துவிட்டு வந்ததாகவும், தங்களால் காலை நேரத்தில்தான் வர முடிந்தது என்றும் சில பெண்கள் கூறினர்.

இதனிடையே, பெண்கள் வரிசைப் பாதுகாப்புக்கு ஒரே ஒரு ஆண் காவலரும் மூன்று பெண் காவலர்களும் மட்டுமே இருந்தனர். ஆண்கள் பகுதியில் அருவிக் கரைப் பகுதியில் மொத்தமாக நின்றிருந்தவர்களை விரட்டி விடுவதிலேயே கவனமாக இருந்த காவலர்கள், பின்னர் ஆண்களையும் வரிசையில் வரச் செய்தனர்.

இருப்பினும், அருவிப் பகுதியில் இருக்கும் பிடி கம்பிகளுக்கு இடையே மொத்தமாக ஆண்கள் முண்டியடித்தபடி குளிக்க நெருங்க தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவின் மேல் நின்ற காவலர், பிரம்புக் கம்பால் அருவியில் வெகு நேரம் குளிக்கவிடாதபடி சிலரைத் தள்ளி விட்டுக் கொண்டிருந்தாரே தவிர, வரிசையாக வரச் செய்ய வேறு எவரும் வழிகாட்டவில்லை.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

தண்ணீர் மிதமாக விழும்போது, ஆண்கள் பகுதியில் அருவி மூன்று பகுதிகளாகப் பரந்து விழும். அந்நேரத்தில், அருவி நீர் விழும் பாறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகளை வரிசையாக வரச் செய்து, அருவியின் பாதுகாப்பு வளைவைப் பிரித்தபடி அமைந்திருக்கும் சுவர் வரை ஒரு வளைவாக வந்து திரும்புமாறு வரிசையை ஒழுங்குபடுத்தினால், குளிக்க வரும் அனைவருமே குற்றாலத்தில் குளித்த அனுபவத்தைப் பெற வாய்ப்பு ஏற்படும்! காவல்துறையினர் இதை கவனத்தில் கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories