குற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்… நீண்ட வரிசை! நிம்மதி இல்லை!

courtallam jul22 - 2026

நெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் பிரதான அருவியில் இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ஆண்கள் பகுதியில் காலை நேரத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. ஆனால் பெண்கள் பகுதியில் நீண்ட வரிசை காத்திருந்தது.

அருவிக்கு, குற்றால நாதர் கோயில் பகுதியில் இருந்து செல்லும் பாலத்தில் நின்ற பெண்கள் வரிசை, வாகன நிறுத்துமிடம் வரை சென்றது. தாங்கள் வெகு நேரம் காத்திருப்பதாக பெண்கள் குறைப்பட்டுக் கொண்டனர். பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் தங்கும் விடுதிகளில் இருந்ததாகவும், அப்போது தங்களுடன் வந்த ஆண்கள் இரவிலேயே அருவிக்குச் சென்று குளித்துவிட்டு வந்ததாகவும், தங்களால் காலை நேரத்தில்தான் வர முடிந்தது என்றும் சில பெண்கள் கூறினர்.

இதனிடையே, பெண்கள் வரிசைப் பாதுகாப்புக்கு ஒரே ஒரு ஆண் காவலரும் மூன்று பெண் காவலர்களும் மட்டுமே இருந்தனர். ஆண்கள் பகுதியில் அருவிக் கரைப் பகுதியில் மொத்தமாக நின்றிருந்தவர்களை விரட்டி விடுவதிலேயே கவனமாக இருந்த காவலர்கள், பின்னர் ஆண்களையும் வரிசையில் வரச் செய்தனர்.

இருப்பினும், அருவிப் பகுதியில் இருக்கும் பிடி கம்பிகளுக்கு இடையே மொத்தமாக ஆண்கள் முண்டியடித்தபடி குளிக்க நெருங்க தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவின் மேல் நின்ற காவலர், பிரம்புக் கம்பால் அருவியில் வெகு நேரம் குளிக்கவிடாதபடி சிலரைத் தள்ளி விட்டுக் கொண்டிருந்தாரே தவிர, வரிசையாக வரச் செய்ய வேறு எவரும் வழிகாட்டவில்லை.

தண்ணீர் மிதமாக விழும்போது, ஆண்கள் பகுதியில் அருவி மூன்று பகுதிகளாகப் பரந்து விழும். அந்நேரத்தில், அருவி நீர் விழும் பாறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகளை வரிசையாக வரச் செய்து, அருவியின் பாதுகாப்பு வளைவைப் பிரித்தபடி அமைந்திருக்கும் சுவர் வரை ஒரு வளைவாக வந்து திரும்புமாறு வரிசையை ஒழுங்குபடுத்தினால், குளிக்க வரும் அனைவருமே குற்றாலத்தில் குளித்த அனுபவத்தைப் பெற வாய்ப்பு ஏற்படும்! காவல்துறையினர் இதை கவனத்தில் கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories