குற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்… நீண்ட வரிசை! நிம்மதி இல்லை!

courtallam jul22 - 2026

நெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் பிரதான அருவியில் இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ஆண்கள் பகுதியில் காலை நேரத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. ஆனால் பெண்கள் பகுதியில் நீண்ட வரிசை காத்திருந்தது.

அருவிக்கு, குற்றால நாதர் கோயில் பகுதியில் இருந்து செல்லும் பாலத்தில் நின்ற பெண்கள் வரிசை, வாகன நிறுத்துமிடம் வரை சென்றது. தாங்கள் வெகு நேரம் காத்திருப்பதாக பெண்கள் குறைப்பட்டுக் கொண்டனர். பெரும்பாலும் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் தங்கும் விடுதிகளில் இருந்ததாகவும், அப்போது தங்களுடன் வந்த ஆண்கள் இரவிலேயே அருவிக்குச் சென்று குளித்துவிட்டு வந்ததாகவும், தங்களால் காலை நேரத்தில்தான் வர முடிந்தது என்றும் சில பெண்கள் கூறினர்.

இதனிடையே, பெண்கள் வரிசைப் பாதுகாப்புக்கு ஒரே ஒரு ஆண் காவலரும் மூன்று பெண் காவலர்களும் மட்டுமே இருந்தனர். ஆண்கள் பகுதியில் அருவிக் கரைப் பகுதியில் மொத்தமாக நின்றிருந்தவர்களை விரட்டி விடுவதிலேயே கவனமாக இருந்த காவலர்கள், பின்னர் ஆண்களையும் வரிசையில் வரச் செய்தனர்.

இருப்பினும், அருவிப் பகுதியில் இருக்கும் பிடி கம்பிகளுக்கு இடையே மொத்தமாக ஆண்கள் முண்டியடித்தபடி குளிக்க நெருங்க தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவின் மேல் நின்ற காவலர், பிரம்புக் கம்பால் அருவியில் வெகு நேரம் குளிக்கவிடாதபடி சிலரைத் தள்ளி விட்டுக் கொண்டிருந்தாரே தவிர, வரிசையாக வரச் செய்ய வேறு எவரும் வழிகாட்டவில்லை.

தண்ணீர் மிதமாக விழும்போது, ஆண்கள் பகுதியில் அருவி மூன்று பகுதிகளாகப் பரந்து விழும். அந்நேரத்தில், அருவி நீர் விழும் பாறையை ஒட்டி சுற்றுலாப் பயணிகளை வரிசையாக வரச் செய்து, அருவியின் பாதுகாப்பு வளைவைப் பிரித்தபடி அமைந்திருக்கும் சுவர் வரை ஒரு வளைவாக வந்து திரும்புமாறு வரிசையை ஒழுங்குபடுத்தினால், குளிக்க வரும் அனைவருமே குற்றாலத்தில் குளித்த அனுபவத்தைப் பெற வாய்ப்பு ஏற்படும்! காவல்துறையினர் இதை கவனத்தில் கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories