சென்னை: மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மோட்டார் தொழில் சார்ந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மோட்டார் வாகன சட்ட திருத்தம் செய்தால் இத் தொழிலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி.,உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள எல்.பி. எப்., பாட்டாளி, விடுதலைச் சிறுத்தை, மறு மலர்ச்சி, தே.மு. தி.க. போன்ற சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றன.
தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அரசு போக்குவரத்து, ஆட்டோக்கள், கால் டாக்சிகள் போன்றவை ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




