திமுக.,வுக்கு மு.க.அழகிரி விட்டுள்ள சாபம்!

11 Sep04 Alagiri - 2026

திமுக.,வுக்கு மு.க.அழகிரி சாபம் விட்டுள்ளார். தன்னை திமுக.,வி இணைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துப் பார்த்தார். தொடர்ந்து தன் குடும்பத்தினர் மூலம் வலியுறுத்தி தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ளும்படி கேட்டுப் பார்த்தார். ஆனால் அவரை கட்சியில் சேர்க்க விடாமல் சிலர் தடுத்து வருகின்றனர்.

இதனால் தனக்குள்ள செல்வாக்கைக் காட்ட, சென்னையில் கருணாநிதியின் சமாதியை நோக்கி பேரணி நடத்தினார். அமைதிப் பேரணி என்ற பெயரில், அஞ்சலி செலுத்தவே வந்தோம் எனக் காட்ட ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டிக் காட்டினார்.

தொடர்ந்து இந்த ஒன்றரை லட்சம் பேரையும் கட்சியை விட்டு நீக்கிட முடியுமா என்றும் கேள்விக் கணை தொடுத்தார். எதற்கும் அசைந்து கொடுக்காமல், பதிலுக்கு மு.க.ஸ்டாலின் அதே போன்று சமாதி தியானம் செய்ய கருணாநிதியின் சமாதியை நோக்கி நடை போட்டார்.

இந்நிலையில், திமுக.,வுக்கு சாபம் விடுக்கும் வகையில் அழகிரி செய்தியாளர்களிடம் கூறிய கருத்துகள்…

திருப்பரங்குன்றத்தில் திமுக 4வது இடத்திற்கு போகப்போகிறது. திருவாரூர் தொகுதியிலும் திமுகவால் வெற்றி பெற முடியாது என்று தேர்தல் கணக்கைக் காட்டியுள்ளார்.

அழகிரி அரசியல் கட்சியில் இருந்தாக வேண்டிய நிலை. திமுக.,வில் வாய்ப்பு இல்லை என்றால், வேறு ஒரு கட்சியில் இருந்து கொண்டு அரசியல் செய்வார் என்றே அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். நிலைமையைப் புரிந்து கொண்டு திமுக., வழிவிடவில்லை என்றால், திமுக.,வில் மீண்டும் ஒரு பிளவு தவிர்க்கமுடியாதது என்று எச்சரிக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories