நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியதாக ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு!

h raja e1537109254447 - 2026

புதுக்கோட்டை: நீதிமன்றத்தையும் காவல்துறையினரையும் அவதூறாகப் பேசியதாக அளிக்கப் பட்ட புகாரில் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில், சனிக்கிழமை தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பாஜக., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கூட்டத்தில் தடை செய்ய வந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நீதிமன்றத்தையும், போலீசாரையும் தரக்குறைவான சொற்களில் பேசியதாக புகார் கூறப் பட்டது. இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு துறையை அவமானப் படுத்தும் வகையில் விமர்சித்தல், சட்ட விரோதமாகக் கூட்டம் கூட்டுதல்,  சட்டத்தை மீறுதல், இரு பிரிவினர் இடையே கலத்தை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது திருமயம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், ஹெச்.ராஜா நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் கூறி தமிழக டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, திருமயத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உட்பட 8 பேரை கைது செய்ய ஆய்வாளர் மனோகரன், பொன்னமராவதி, ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.

1 COMMENT

  1. இந்துசமயத்தினரும் பாசகவினரும் இவரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரசை வலியுறுத்த வேண்டும். பரபரப்பு விளம்பரம் எதிர்வினையாற்றித் தீமையே நல்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழே விழி! தமிழா விழி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories