நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியதாக ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது வழக்கு!

h raja e1537109254447 - 2026

புதுக்கோட்டை: நீதிமன்றத்தையும் காவல்துறையினரையும் அவதூறாகப் பேசியதாக அளிக்கப் பட்ட புகாரில் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்ட 18 பேர் மீது 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில், சனிக்கிழமை தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பாஜக., தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கூட்டத்தில் தடை செய்ய வந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நீதிமன்றத்தையும், போலீசாரையும் தரக்குறைவான சொற்களில் பேசியதாக புகார் கூறப் பட்டது. இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு துறையை அவமானப் படுத்தும் வகையில் விமர்சித்தல், சட்ட விரோதமாகக் கூட்டம் கூட்டுதல்,  சட்டத்தை மீறுதல், இரு பிரிவினர் இடையே கலத்தை ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ஹெச்.ராஜா மீது திருமயம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், ஹெச்.ராஜா நீதிமன்றத்தை அவமதிப்பதாகக் கூறி தமிழக டிஜிபி அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, திருமயத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உட்பட 8 பேரை கைது செய்ய ஆய்வாளர் மனோகரன், பொன்னமராவதி, ஆய்வாளர் கருணாகரன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.

1 COMMENT

  1. இந்துசமயத்தினரும் பாசகவினரும் இவரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரசை வலியுறுத்த வேண்டும். பரபரப்பு விளம்பரம் எதிர்வினையாற்றித் தீமையே நல்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! தமிழே விழி! தமிழா விழி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories