ஸ்ரீரங்கம் கோயில் முன் பணியாளர்கள் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்! பாஜக., பிரமுகருக்கு அடி உதை! பக்தர்கள் கோபம்!

srirangam temple jeyaraman - 2026
ஸ்ரீரங்கம் கோயில் முன் அறநிலையத்துறை ஊழியர்கள் அனுமதியின்றி நடத்திய போராட்டத்தால் பக்தர்கள் அவதி!

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் செயல் அலுவலர் ஜெயராமன் தலைமையில் கோயில் பணியாளர்கள் ஹெச்.ராஜாவை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தினர்.

கோயில் வாசலை மறித்து அறநிலையத்துறைப் பணியாளர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். அப்போது அங்கு பாஜக.,வின் திருச்சி மாவட்ட முன்னாள் ராணுவப் பிரிவு தலைவர் எஸ்.நடராஜன், குடும்பத்துடன் புரட்டாசி மாத வழிபாட்டிற்கு வந்தார். அவர், இந்தப் போராட்டம் குறித்து முணுமுணுத்துக் கொண்டே சென்றுள்ளார். ரெங்கா ரெங்கா கோபுர வாசலில் அவர் சென்றபோது ஜெயராமனுடன் இருந்தவர்கள் அதோ பாஜக., காரர்கள் என்று அவர் மீது பாய்ந்துள்ளனர்.

இதை அடுத்து நடராஜன், ஹெச்.ராஜா தவறாகப் பேசி இருந்தால் போலீஸாரிடம் அனுமதி வாங்கி முறையாக போராட்டம் நடத்த வேண்டியது தானே! கோவில் பணியாளர்கள் கோவிலில் வேலை பார்க்காமல் சட்டவிரோதமாக காவல்துறை அனுமதியின்றி கோவில் வாசலில் கூடவேண்டிய அவசியம் எதற்கு? என கேட்டுள்ளார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..
srirangam temple jeyaraman2 - 2026
ஸ்ரீரங்கம் கோயில் முன் அறநிலையத்துறை ஊழியர்கள் அனுமதியின்றி நடத்திய போராட்டத்தால் பக்தர்கள் அவதி!

கோவிலில் அதிகாரி ஜெயராமனுக்கு துணையாக அடியாட்களாக ஓய்வு  பெற்ற விஏஓ.,  சூசி என்கிற சுதர்சன் ஆகியோர் வலம் வருவதாகவும், அவர்கள் திடீரெனப் பாய்ந்து  நடராஜனைத் தாக்கியுள்ளனர் என்று கூறப் படுகிறது. அப்போது அங்கிருந்த காவல்துறையினர் நடராஜனை பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.  நடராஜன் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஜெயராமன் உதவியாளர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தில் நடந்த இந்தச் சம்பவங்கள் பக்தர்கள் மனத்தில் பெரும் வருத்தத்தையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1 COMMENT

  1. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செயல் தலைவரா ? அல்லது ரௌடிகளுக்கு தலைவரா இந்த ஜெயராமன் ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories