ஸ்ரீரங்கம் கோயில் முன் பணியாளர்கள் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்! பாஜக., பிரமுகருக்கு அடி உதை! பக்தர்கள் கோபம்!

srirangam temple jeyaraman - 2026
ஸ்ரீரங்கம் கோயில் முன் அறநிலையத்துறை ஊழியர்கள் அனுமதியின்றி நடத்திய போராட்டத்தால் பக்தர்கள் அவதி!

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் செயல் அலுவலர் ஜெயராமன் தலைமையில் கோயில் பணியாளர்கள் ஹெச்.ராஜாவை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தினர்.

கோயில் வாசலை மறித்து அறநிலையத்துறைப் பணியாளர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். அப்போது அங்கு பாஜக.,வின் திருச்சி மாவட்ட முன்னாள் ராணுவப் பிரிவு தலைவர் எஸ்.நடராஜன், குடும்பத்துடன் புரட்டாசி மாத வழிபாட்டிற்கு வந்தார். அவர், இந்தப் போராட்டம் குறித்து முணுமுணுத்துக் கொண்டே சென்றுள்ளார். ரெங்கா ரெங்கா கோபுர வாசலில் அவர் சென்றபோது ஜெயராமனுடன் இருந்தவர்கள் அதோ பாஜக., காரர்கள் என்று அவர் மீது பாய்ந்துள்ளனர்.

இதை அடுத்து நடராஜன், ஹெச்.ராஜா தவறாகப் பேசி இருந்தால் போலீஸாரிடம் அனுமதி வாங்கி முறையாக போராட்டம் நடத்த வேண்டியது தானே! கோவில் பணியாளர்கள் கோவிலில் வேலை பார்க்காமல் சட்டவிரோதமாக காவல்துறை அனுமதியின்றி கோவில் வாசலில் கூடவேண்டிய அவசியம் எதற்கு? என கேட்டுள்ளார்.

srirangam temple jeyaraman2 - 2026
ஸ்ரீரங்கம் கோயில் முன் அறநிலையத்துறை ஊழியர்கள் அனுமதியின்றி நடத்திய போராட்டத்தால் பக்தர்கள் அவதி!

கோவிலில் அதிகாரி ஜெயராமனுக்கு துணையாக அடியாட்களாக ஓய்வு  பெற்ற விஏஓ.,  சூசி என்கிற சுதர்சன் ஆகியோர் வலம் வருவதாகவும், அவர்கள் திடீரெனப் பாய்ந்து  நடராஜனைத் தாக்கியுள்ளனர் என்று கூறப் படுகிறது. அப்போது அங்கிருந்த காவல்துறையினர் நடராஜனை பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.  நடராஜன் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஜெயராமன் உதவியாளர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தில் நடந்த இந்தச் சம்பவங்கள் பக்தர்கள் மனத்தில் பெரும் வருத்தத்தையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1 COMMENT

  1. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செயல் தலைவரா ? அல்லது ரௌடிகளுக்கு தலைவரா இந்த ஜெயராமன் ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories