December 5, 2025, 2:56 PM
26.9 C
Chennai

ஸ்ரீரங்கம் கோயில் முன் பணியாளர்கள் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்! பாஜக., பிரமுகருக்கு அடி உதை! பக்தர்கள் கோபம்!

srirangam temple jeyaraman - 2025
ஸ்ரீரங்கம் கோயில் முன் அறநிலையத்துறை ஊழியர்கள் அனுமதியின்றி நடத்திய போராட்டத்தால் பக்தர்கள் அவதி!

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் செயல் அலுவலர் ஜெயராமன் தலைமையில் கோயில் பணியாளர்கள் ஹெச்.ராஜாவை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தினர்.

கோயில் வாசலை மறித்து அறநிலையத்துறைப் பணியாளர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தால் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். அப்போது அங்கு பாஜக.,வின் திருச்சி மாவட்ட முன்னாள் ராணுவப் பிரிவு தலைவர் எஸ்.நடராஜன், குடும்பத்துடன் புரட்டாசி மாத வழிபாட்டிற்கு வந்தார். அவர், இந்தப் போராட்டம் குறித்து முணுமுணுத்துக் கொண்டே சென்றுள்ளார். ரெங்கா ரெங்கா கோபுர வாசலில் அவர் சென்றபோது ஜெயராமனுடன் இருந்தவர்கள் அதோ பாஜக., காரர்கள் என்று அவர் மீது பாய்ந்துள்ளனர்.

இதை அடுத்து நடராஜன், ஹெச்.ராஜா தவறாகப் பேசி இருந்தால் போலீஸாரிடம் அனுமதி வாங்கி முறையாக போராட்டம் நடத்த வேண்டியது தானே! கோவில் பணியாளர்கள் கோவிலில் வேலை பார்க்காமல் சட்டவிரோதமாக காவல்துறை அனுமதியின்றி கோவில் வாசலில் கூடவேண்டிய அவசியம் எதற்கு? என கேட்டுள்ளார்.

srirangam temple jeyaraman2 - 2025
ஸ்ரீரங்கம் கோயில் முன் அறநிலையத்துறை ஊழியர்கள் அனுமதியின்றி நடத்திய போராட்டத்தால் பக்தர்கள் அவதி!

கோவிலில் அதிகாரி ஜெயராமனுக்கு துணையாக அடியாட்களாக ஓய்வு  பெற்ற விஏஓ.,  சூசி என்கிற சுதர்சன் ஆகியோர் வலம் வருவதாகவும், அவர்கள் திடீரெனப் பாய்ந்து  நடராஜனைத் தாக்கியுள்ளனர் என்று கூறப் படுகிறது. அப்போது அங்கிருந்த காவல்துறையினர் நடராஜனை பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.  நடராஜன் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஜெயராமன் உதவியாளர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆலயத்தில் நடந்த இந்தச் சம்பவங்கள் பக்தர்கள் மனத்தில் பெரும் வருத்தத்தையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1 COMMENT

  1. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செயல் தலைவரா ? அல்லது ரௌடிகளுக்கு தலைவரா இந்த ஜெயராமன் ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories