கருணாஸ் மீது மேலும் 2 வழக்குகள்; எம்.எல்.ஏ., பதவியே போகும் என்கிறார் ஜெயக்குமார்!

karunas 1 - 2026

சென்னை: திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய காவல் துறையின் மனுவை சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கருணாஸின் மீது மேலும் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

செப். 16ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் குறித்தும் காவல்துறை அதிகாரி குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருணாஸ், சாதி ரீதியாக கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், தனது அமைப்பின் இளைஞர்களை கைய வெட்டு கால வெட்டு, கொலை செய்துட்டு வா என வன்முறையைத் தூண்டி தவறான பாதைக்குச் செல்ல வழிகாட்டியும் பேசினார்.

இதை அடுத்து அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கின் போது ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கருணாஸின் பேச்சு கொலை செய்யத் தூண்டும் வகையில் உள்ளதால் அவரது பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரினார். மேலும் கொலை செய்யக் கூடிய ஆட்கள் யாரும் கருணாசுடன் உள்ளனரா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

மேலும், காவல் அதிகாரி அரவிந்தன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருணாஸ் பேசியதற்கான காரணம், கொலை மிரட்டல் விடுத்ததன் பின்னணி குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் கூறினார்.

தென் மாவட்டங்களில் நடைபெற்ற சாதிய மோதல்களுக்கும், கருணாசுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிபதியிடம் கூறினார். இருப்பினும், தனக்கு உடல் நிலை சரியில்லாததால் போலீஸ் காவலுக்கு அனுமதிக்கக் கூடாது என்று கருணாஸ் கேட்டுக் கொண்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதித்துறை நடுவர், காவல் துறையின் மனுவை தள்ளுபடி செய்தார். தொடர்ந்து ஜாமீன் கோரி கருணாஸ் தாக்கல் செய்த மனு நாளை விசாரிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். பின்னர் கருணாஸ் மீண்டும் வேலூர் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதனிடையே, சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பான 2 வழக்குகளில் மீண்டும் காவல் துறையினர் கருணாஸை கைது செய்துள்ளனர்

திருவல்லிக்கேணி போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் கருணாஸ் மீது பதிவு செய்திருந்த 2 வழக்குகளில் மீண்டும் கைது செய்துள்ளனர். ஏப்ரம் 10-ஆம் தேதி  சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் இணைந்து போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டத்தில் சில இடங்களில் வன்முறைச் சம்வங்கள் அரங்கேறின.

கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் தாக்கப்பட்டது தொடர்பாக வெளியான காட்சிகளின் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கருணாஸின் ஆதரவாளர்கள் என திருவல்லிக்கேணி போலீசார் கண்டறிந்து கருணாஸ் உள்ளிட்டவர்கள் மீது தனித்தனியாக 2 வழக்குகளை பதிவு செய்திருந்தனர். கொலை முயற்சி, கொலை மிரட்டல், உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த 2 வழக்குகளிலும் சட்டமன்ற உறுப்பினரான கருணாஸை திருவல்லிக்கேணி போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். எழும்பூர் 13-வது நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நாளை வேலூர் சிறையில் வழங்கி கருணாஸை இந்த வழக்கில் காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்

இதனிடையே, கருணாஸ் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்,  எம்.எல். ஏ., பதவியை கருணாஸ் இழக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories