ஆளுநருக்கே அறிவுரை… இது ஆழ்வார்பேட்டை ஆண்டவர் ஸ்டைல்..!

Published:

IMG 20181012 WA0002 - 2026

ஆளுநர் மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவர் பதவி விலக வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

சேலம் செல்லும்முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழையை காரணம் காட்டி இடைத் தேர்தலை தமிழக அரசு தள்ளிப் போடுவது நாடகம் ஆடுவதை காண்பிக்கிறது என்றும், இதற்காக தேர்தலை தள்ளி போட வேண்டுமா என்றும் கமல் கேள்வி எழுப்பினார்.

சிலைகடத்தல் விவகாரத்தில் கோயிலுக்கு சொந்தமான சிலைகள் என்பது நம்முடைய சொத்து தமிழகத்தை சேர்ந்த அனைவரும் அதனை பாதுகாக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் உதவ முன் வந்தபோதும், எங்களுக்கு அந்த அளவுக்கு திறமை இல்லை என தட்டிக்கழித்து விட்டனர்.

நிதின் கட்கரியின் கருத்துக்கு, உண்மையை பேசக்கூடிய சில அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.

வைரமுத்து விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் தான் கருத்து சொல்ல வேண்டும்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

ஆளுநர் விவகாரத்தில் தவறு இருக்கும் பட்சத்தில் பதவி விலக வேண்டியது தான் தைரியமான அரசியவதிக்கு அழகு. அதை நிரூபிக்கும் வரை அவர் தன் பதவியில் இருக்கக் கூடாது என்றும், ஆளுநர் என்பவர் மிகவும் ஜாக்கிரதையாகவும் மரியாதை யாகவும் பேச வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கிற ஓ.பி.எஸ் பேச்சுக்கு, அது வெறும் பேச்சு மட்டும் தான் எனக் கூறினார் கமல்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img