February 21, 2026, 10:52 AM
25.6 C
Chennai

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னை, வாழைக் கன்றுகள் இலவசமாக வழங்குகிறது அரசு!

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னை, வாழைக் கன்றுகளை இலவசமாக வழங்கவுள்ளது அரசு. புயல் பாதித்த பகுதிகளில் மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்தன. இங்கெல்லாம், பொது மக்களின் சொத்துகள் பல சேதமடைந்தன.  பல ஆண்டுகளாக வளர்த்து வந்த தென்னை மரங்களும் லட்சக்கணக்கில் வேருடன் சாய்ந்தன. மா, பலா, முந்திரி, தேக்கு உள்ளிட்ட நீண்டகால மரங்களும் சாய்ந்தன. நெல், வாழை, கரும்பு ஆகியவையும் நாசமாயின.

வீடுகள் சேதமடைந்தன. வாழ்வாதாரமாக விளங்கிய பயிர்களும், மரங்களும் சேதமாகின. இதனால், புயலில் சாய்ந்த தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.1,100 வீதம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதேபோல், மற்ற பயிர்களுக்கும் இழப்பீடு அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு மறுவாழ்வுத் திட்டம் ஒன்றை தமிழக அரசு செயல்படுத்தப் படவுள்ளதாகக் கூறப் படுகிறது.

அதன்படி, விவசாயிகளுக்கு புதிதாக மரக் கன்றுகளை இலவசமாக வழங்கவும், ஓர் ஆண்டுக்கான உரத்தையும் விலையில்லாமல் கொடுக்கவும் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக, 5 லட்சம் தென்னங் கன்றுகளை கர்நாடகாவில் இருந்து வாங்க முடிவு செய்யப் பட்டுள்ளதாம். மேலும், டெல்டா மாவட்டங்களில் தற்போது நடந்து வரும் இழப்பு குறித்த கணக்கெடுப்பு நிறைவு பெற்றதும், மறுவாழ்வுத் திட்டத்தை அரசு அறிவிக்கும் என்று கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories