ஹனீபா மறைவுக்கு இ.கம்யூ. இரங்கல்

Published:

ஹனீபா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், திராவிட முன்னேற்ற கழக கொள்கைகளை தனது பாடல்கள் மூலம் பரப்பி வந்தவரும். தமிழ்நாடு முன்னாள் மேலவை உறுப்பினறுமான நாகூர் அனிபா மறைவிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரது பிரிவால் வாடும் குடும்பதார்களுக்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறன். நாகூர் அனிபா அவர்கள் பகுத்தறிவு கொள்கைகளுக்காகவும் சிறுபான்மை மக்களின் உரிமைக்காகவும் குரல் எழுப்பியவர். தி.மு.கவின் அரசியல் கருத்துகளையும் பொதுவான நல்ல கருத்துகளையும் பாடலாக்கி, மெட்டுமைத்து இசை இசைத்து பாடியதிறன் மிக்கவர். தனது பாடல், இசை திறனானல் சிங்கபூர், மலேசியா என உலக தமிழர்களால் அறியப்பட்டவர். அவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தமிழக கலை உலகத்திற்கும் பேரிழப்பாகும். – என்று கூறியுள்ளார்/

Related articles

Recent articles

spot_img