தமிழகத்தில் ஏழை எளிய மக்களிடம் வழிப்பறி கொள்ளையடிக்கும் சுங்க சாவடிகளை கண்டித்து தமிழகத்தில் உள்ள 41 சுங்க சாவடிகள் முன்பு முற்றுகைப் போராட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் இன்று நடைபெறும் என தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அறிவித்திருந்தார். அதன் படி, தமிழகத்தில் மொத்தம் 41 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 29 சுங்கச் சாவடிகளில் தனியாரும் 12 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன. முற்றுகை போராட்டத்தில் வாகன ஓட்டுனர்கள் , பொது மக்கள், வாகன உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கரூர் மாவட்டம், மணவாசி டேல்கேட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் முற்றுகையிட சென்றனர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி பாலா சிறப்புரையாற்றினார். மேலும் தமிழகத்தில் ஏழை, எளிய மக்களை கொள்ளையடிக்கும் பொருட்டு சுங்கச் சாவடிகள் நடந்து கொண்டு வருகின்றன. ஆனால் அடிப்படை வசதிகள் ஆனால் சுங்கச்சாவடிகளில் ஏதும் இல்லை. ஆதலால் மத்திய அரசின் இந்த சட்ட விரோத கொள்கையை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். மேலும் ஆந்திர அரசு காட்டுமிராண்டித்தனமாக தமிழர்கள் 20 பேரை சுட்டுக் கொண்டதற்கு வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் உயிரிழந்த தமிழர்களுக்கு ஆந்திர அரசு தக்க நிவாரணம் வழாங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என மாநில மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி பாலா தெரிவித்துக் கொண்டார்.
கரூர் அருகே சுங்கச்சாவடி முற்றுகை: தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 100பேர் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari