இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்ததால் படுகொலையான ராமலிங்கம் குடும்பத்தினரை சந்தித்து ஹெச்.ராஜா ஆறுதல்!

WhatsApp Image 2019 02 07 at 16.18.13 - 2026

இஸ்லாமிய மதமாற்றத்தை தடுத்து வாக்குவாதம் செய்ததால் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாமக., நிர்வாகி திருபுவனம் ராமலிங்கம் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா இன்று திருபுவனம் வந்திருந்தார்.

ராமலிங்கம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஹிந்து உணர்வு மேலிட இஸ்லாமிய மதப் பிரச்சாரத்தை தடுத்ததால் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்ட முன்னாள் பாமக நிர்வாகி திருபுவனம் ராமலிங்கம் குடும்பத்தினரை இன்று காலை பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

WhatsApp Image 2019 02 07 at 16.17.54 - 2026

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச் ராஜா, வழக்கம் போல் போலீஸார் எதையாவது சொல்லி இந்த விவகாரத்தை திசை திருப்பி விட முடியாது. பெண்கள் பிரச்சினையாக இருக்கும்; பணப் பிரச்சினை இருக்கும்; பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருக்குமோ என்றெல்லாம் போலீஸார் கருத வாய்ப்பு இல்லாத வகையில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

இவர் மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 10 மணி நேரத்தில் கொல்லப்பட்டிருக்கிறார். பகல் 12 மணிக்கு அந்த சம்பவம் நடந்தது இரவு 12 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. எனவே போலீசார் தங்கள் தந்திரங்களைக் காட்டி, திசைதிருப்புதல் இயலாது

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

எனவே அனைத்து இந்து சமுதாய தலைவர்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் இந்த நாட்டில் மதச்சார்பின்மை என்பது இந்து மதத்தை மட்டுமே அழிக்க பயன்படுத்தும் ஒரு வார்த்தை. அதோடு மட்டுமல்ல இந்த சம்பவத்துக்கு முன் முஸ்லிம்கள் மதத் தீவிரவாதிகள் மதமாற்ற இங்கு வருகிறார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

திருமாவளவன் திருச்சியில் சனாதன இந்து தர்மத்தை வேரறுப்போம் என்று கூட்டிய மாநாட்டுக்கு வேற்று நாடுகளில் இருந்து வந்த பல்வேறு இயக்கங்களில் இருக்கக் கூடிய தீவிரவாத சக்திகளை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சனாதன இந்து தர்மத்தை வேரறுப்போம் என்று பேசுகிறார்.

ஸ்டாலின் பேசியதற்கான செயல் வடிவம்தன் இது என்று நான் குற்றம் சாட்டுகிறேன்! இதுவரை ஸ்டாலின் இந்த சம்பவத்துக்கு எதிர்த்து எதுவும் பேசவில்லை! இதே நேரம் ஒரு முஸ்லிம் இப்படி கொல்லப்பட்டிருந்தால் திருமாவளவன் வைகோ சீமான் எல்லோரும் வாய் திறந்து இருப்பார்கள். சனாதன தர்மத்தை அழிக்க வேண்டுமென்றால் உணர்வுள்ள ராமலிங்கம் போன்றவர்களை அழிக்க வேண்டும் அதற்கான செயல்பாடுதான் இது!

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இங்கே உள்ளூர் டிஎஸ்பி யாரென்று எனக்குத் தெரியாது. இவர்கள் கடை வைத்து பிழைத்து கொண்டிருக்கிறார்கள். அந்த வாகனத்தையும் செல்போனையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள் போலீஸார். கொலை செய்தவர்களின் விவரங்களைத்தான் அறிய வேண்டும் கைது செய்ய வேண்டும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்! ஆனால் பலியான ஒருவரது செல்போனையும் வாகனத்தையும் பறிமுதல் செய்து இருக்கின்றனர். அது தவறு.

எனவே, இவர்களிடம் அந்த வாகனத்தை ஒப்படைக்கும் வரை ஹெச் ராஜா மெயின் ரோட்டில் தர்ணாவில் ஈடுபட வேண்டியிருக்கும். இந்துக்கள் அனாதைகளாக இருப்பார்கள்; காவல்துறையினர் ஏறி மேயலாம்; கல்யாணராமனை கைது செய்யலாம்; ஆனால் கொலைகாரனை தப்பவிடலாம் என்ற ஒரு சூழ்நிலையை நாம் அனுமதிக்க இயலாது

கல்யாணராமன் சமூக வலைதளங்களில் ஏதோ கருத்து எழுதினார்! அவரை பன்னாட்டு சர்வதேச பயங்கரவாதியைக் கைது செய்வது போல் விமான நிலையத்தில் அமர்ந்து கொண்டு நேரத்தை வீணாக்கி செலவு செய்து இருக்கிறார்கள் ஆனால் இங்கே பிரச்சினை நடந்தபோது ராமலிங்கத்துக்கு அந்தப் பாதுகாப்பு கொடுத்து இருப்பார்கள் என்றால் இந்தக் கொலை நடந்து இருக்காது

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

ஆகவே ராமலிங்கத்தினுடைய கடையை திறக்க வேண்டும்; கடைக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’ குடும்பத்திற்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்! அந்த வாகனத்தை உடனடியாக போலீசார் திருப்பி கொடுக்க வேண்டும்! குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும்! ஒப்படைக்கும் வரை ஹெச் ராஜா சாலையை விட்டு நகர மாட்டார் என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன்… என்று செய்தியாளர்களிடம் கூறியபடியே சாலையில் அமர்ந்தார் ஹெச்.ராஜா.

அந்த வீடியோ தொகுப்பு இங்கே…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories