ஸ்டாலினை அடுத்து… இந்து ஓட்டு வங்கி அச்சத்தில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி!

KSAlagiri - 2026

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார் கே.எஸ்.அழகிரி. இவர் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் விசுவாசி என்றெல்லாம் கூறப் படுபவர். திருநாவுக்கரசர் திடீரென தூக்கப்பட்டு அவரது இடத்துக்கு கே.எஸ்.அழகிரி வந்துள்ளார்.

தனது பதவிப் பறிப்பை தான் எதிர்பார்த்திருக்கவில்லை என்று வெளிப்படையாகச் சொன்னார் திருநாவுக்கரசர். மேலும், அதிக நாட்கள் காங்கிரஸ் தலைவராக இருந்த பெருமை தனக்கு இருப்பதாகவும், மற்றவர்கள் எல்லோரும் ஒரு வருடத்துக்குள் தூக்கப்படு விடுவார்கள் என்றும் மியூசிக்கல் சேர் விளையாட்டுதான் காங்கிரஸ் தலைவர் பதவி என்பது என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் திருநாவுக்கரசர்.

இந்நிலையில் இன்று பதவி ஏற்றுக்கொண்ட கே.எஸ்.அழகிரி, தனது பதவி ஏற்பு விழாவில் சிலவற்றை பேசியுள்ளார். அது இப்போதே சர்ச்சையைக் கிளப்பத் தொடங்கிவிட்டது.

கே.எஸ்.அழகிரி பேசியவற்றில் இருந்து….

40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும்; தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

மதச்சார்பற்ற அணி மத்தியில் வர வேண்டும் என்பது தான் இலக்கு!.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டி மோதல் இல்லை, கருத்து வேறுபாடுதான் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது; கட்சியில், பதவி யாருக்கும் நிரந்திரம் இல்லை!

காங்கிரசுக்கு இந்து கடவுள், மதம் மீது நம்பிக்கை உண்டு; ஆனால் மற்றவர்களிடம் திணிப்பதில்லை.!

பிரதமர் மோடி போல் ஆயிரம் பேர் வந்தாலும் காங்கிரஸ் கொள்கைகளை அசைக்க முடியாது என்று கூறியுள்ளார் கே.எஸ். அழகிரி.

திருபுவனத்தில் பாமக நிர்வாகி ராமலிங்கம் பயங்கரவாதத்தால் உயிரிழந்த நிலையில், மூன்று நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்து ஓட்டு வங்கி உருவாகி வருவதன் அச்சத்தால், இப்போது காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸுக்கு இந்து மதம் கடவுள் நம்பிக்கை எல்லாம் உண்டு என்றும், எங்களுக்கும் திமுக.,வுக்கு தொடர்பில்லை, திமுக., கொள்கைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தெளியவைப்பதற்காக கோடிட்டுக் காட்டியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Entertainment News

Popular Categories