ஸ்டாலினை அடுத்து… இந்து ஓட்டு வங்கி அச்சத்தில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி!

KSAlagiri - 2026

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார் கே.எஸ்.அழகிரி. இவர் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் விசுவாசி என்றெல்லாம் கூறப் படுபவர். திருநாவுக்கரசர் திடீரென தூக்கப்பட்டு அவரது இடத்துக்கு கே.எஸ்.அழகிரி வந்துள்ளார்.

தனது பதவிப் பறிப்பை தான் எதிர்பார்த்திருக்கவில்லை என்று வெளிப்படையாகச் சொன்னார் திருநாவுக்கரசர். மேலும், அதிக நாட்கள் காங்கிரஸ் தலைவராக இருந்த பெருமை தனக்கு இருப்பதாகவும், மற்றவர்கள் எல்லோரும் ஒரு வருடத்துக்குள் தூக்கப்படு விடுவார்கள் என்றும் மியூசிக்கல் சேர் விளையாட்டுதான் காங்கிரஸ் தலைவர் பதவி என்பது என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் திருநாவுக்கரசர்.

இந்நிலையில் இன்று பதவி ஏற்றுக்கொண்ட கே.எஸ்.அழகிரி, தனது பதவி ஏற்பு விழாவில் சிலவற்றை பேசியுள்ளார். அது இப்போதே சர்ச்சையைக் கிளப்பத் தொடங்கிவிட்டது.

கே.எஸ்.அழகிரி பேசியவற்றில் இருந்து….

40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும்; தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

மதச்சார்பற்ற அணி மத்தியில் வர வேண்டும் என்பது தான் இலக்கு!.

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டி மோதல் இல்லை, கருத்து வேறுபாடுதான் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது; கட்சியில், பதவி யாருக்கும் நிரந்திரம் இல்லை!

காங்கிரசுக்கு இந்து கடவுள், மதம் மீது நம்பிக்கை உண்டு; ஆனால் மற்றவர்களிடம் திணிப்பதில்லை.!

பிரதமர் மோடி போல் ஆயிரம் பேர் வந்தாலும் காங்கிரஸ் கொள்கைகளை அசைக்க முடியாது என்று கூறியுள்ளார் கே.எஸ். அழகிரி.

திருபுவனத்தில் பாமக நிர்வாகி ராமலிங்கம் பயங்கரவாதத்தால் உயிரிழந்த நிலையில், மூன்று நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்து ஓட்டு வங்கி உருவாகி வருவதன் அச்சத்தால், இப்போது காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸுக்கு இந்து மதம் கடவுள் நம்பிக்கை எல்லாம் உண்டு என்றும், எங்களுக்கும் திமுக.,வுக்கு தொடர்பில்லை, திமுக., கொள்கைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தெளியவைப்பதற்காக கோடிட்டுக் காட்டியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories