December 6, 2025, 10:32 AM
26.8 C
Chennai

ஸ்டாலினை அடுத்து… இந்து ஓட்டு வங்கி அச்சத்தில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி!

KSAlagiri - 2025

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார் கே.எஸ்.அழகிரி. இவர் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் விசுவாசி என்றெல்லாம் கூறப் படுபவர். திருநாவுக்கரசர் திடீரென தூக்கப்பட்டு அவரது இடத்துக்கு கே.எஸ்.அழகிரி வந்துள்ளார்.

தனது பதவிப் பறிப்பை தான் எதிர்பார்த்திருக்கவில்லை என்று வெளிப்படையாகச் சொன்னார் திருநாவுக்கரசர். மேலும், அதிக நாட்கள் காங்கிரஸ் தலைவராக இருந்த பெருமை தனக்கு இருப்பதாகவும், மற்றவர்கள் எல்லோரும் ஒரு வருடத்துக்குள் தூக்கப்படு விடுவார்கள் என்றும் மியூசிக்கல் சேர் விளையாட்டுதான் காங்கிரஸ் தலைவர் பதவி என்பது என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் திருநாவுக்கரசர்.

இந்நிலையில் இன்று பதவி ஏற்றுக்கொண்ட கே.எஸ்.அழகிரி, தனது பதவி ஏற்பு விழாவில் சிலவற்றை பேசியுள்ளார். அது இப்போதே சர்ச்சையைக் கிளப்பத் தொடங்கிவிட்டது.

கே.எஸ்.அழகிரி பேசியவற்றில் இருந்து….

40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும்; தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.

மதச்சார்பற்ற அணி மத்தியில் வர வேண்டும் என்பது தான் இலக்கு!.

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் கோஷ்டி மோதல் இல்லை, கருத்து வேறுபாடுதான் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறது; கட்சியில், பதவி யாருக்கும் நிரந்திரம் இல்லை!

காங்கிரசுக்கு இந்து கடவுள், மதம் மீது நம்பிக்கை உண்டு; ஆனால் மற்றவர்களிடம் திணிப்பதில்லை.!

பிரதமர் மோடி போல் ஆயிரம் பேர் வந்தாலும் காங்கிரஸ் கொள்கைகளை அசைக்க முடியாது என்று கூறியுள்ளார் கே.எஸ். அழகிரி.

திருபுவனத்தில் பாமக நிர்வாகி ராமலிங்கம் பயங்கரவாதத்தால் உயிரிழந்த நிலையில், மூன்று நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்து ஓட்டு வங்கி உருவாகி வருவதன் அச்சத்தால், இப்போது காங்கிரஸ் தலைவரும், காங்கிரஸுக்கு இந்து மதம் கடவுள் நம்பிக்கை எல்லாம் உண்டு என்றும், எங்களுக்கும் திமுக.,வுக்கு தொடர்பில்லை, திமுக., கொள்கைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தெளியவைப்பதற்காக கோடிட்டுக் காட்டியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories