ஸ்டாலினை அடுத்து சீமானும் கண்டனம்!

13 May28 Seeman - 2026

கும்பகோணம் அருகே திருபுவனத்தைச் சேர்ந்த பாமக., பிரமுகர் ராமலிங்கம் இஸ்லாமிய மதமாற்றத்தைத் தடுத்த காரணத்துக்காக காபிர் எனும் வகையில் அடிப்படைவாத பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப் பட்டார். ராமலிங்கம் படுகொலை நடந்து 3 நாட்கள் ஆன நிலையில் இன்று ஸ்டாலின் தன் கண்டனத்தை டிவிட்டர் பதிவின் வாயிலாகத் தெரிவித்துக் கொண்டார்.

இந்நிலையில், கொலையுண்ட ராமலிங்கத்தின் வீட்டுக்கு உடனே சென்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா ஆறுதல் கூறினார். இந்நிலையில் பாமக., நிறுவுனர் ராமதாஸ், தம் கட்சி நிர்வாகி என்ற வகையில் கண்டன அறிக்கை வெளியிட்டார்.

வேறு எந்த அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இந்தச் சம்பவத்தில் கண்டனம் தெரிவிக்கவோ, அறிக்கை வெளியிடவோ இல்லை. இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல் வாயை மூடிக் கொண்டு கடந்துவிட்டன. அவர்களால் வளர்க்கப்பட்ட, வாங்கப்பட்ட, நடத்தப்படும் ஊடகங்களும் ராமலிங்கம் படுகொலை குறித்த செய்திகளில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, சின்னத்தம்பி யானைக்கு மணி மாட்டி விடலாமா, குப்பைக் கிடங்கில் பெண் தலை, அருகே கொலை, என்று தங்கள் சேனல் நேயர்களை முட்டாள்களாக்கி வந்தன.

அதே நேரம் வட நாட்டு ஊடகங்களில் ராமலிங்கத்தின் படுகொலை குறித்தும், தமிழகத்தில் பெருகிவரும் மத பயங்கரவாதம் குறித்தும், மத பயங்கரவாதிகளின் தார்க்கோலுக்கு ஏற்ப ஸ்டலின் உள்ளிட்ட அரசியல் வாதிகள் நடனமாடுவதையும் குறித்து படு பயங்கர விமர்சனங்களை முன்வைத்தன.

இந்நிலையில், 3 நாட்கள் கழித்து இன்று ஸ்டாலின் கண்டனத்தை டிவிட்டர் பதிவில் வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தன் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

ராமலிங்கம் கொலையின் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து உடனே கைது செய்யவேண்டும். வன்முறை என்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல;ஒரு உயிரைப்பறித்து அதில் சுகம் காண்பது என்பது மிகக்கொடூரமான மனநிலையாகும். எதன் பொருட்டும் இதுபோன்ற படுகொலைகளை நியாயப்படுத்தவோ, சகித்துக்கொள்ளவோ முடியாது – என்று சீமான் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories