December 6, 2025, 11:30 AM
26.8 C
Chennai

மூன்று நாட்களுக்குப் பின் முழித்துக் கொண்ட மு.க.ஸ்டாலின்! ராமலிங்கம் படுகொலைக்கு கண்டனம்!

admin dmk - 2025

கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் பகுதியில் கடந்த செவ்வாய் நள்ளிரவு இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்தார் என்ற காரணத்துக்காக, அடிப்படைவாத பிரிவினைவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்ட ராமலிங்கம் படுகொலைக்கு, மூன்று நாட்கள் கழித்து இன்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்த கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்!

இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், எந்த மதத்தினராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் நிலவும் பாரம்பரியமிக்க மதநல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க அ.தி.மு.க அரசு முன்வர வேண்டும்.

என்று குறிப்பிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

அண்மைக் காலமாக, இஸ்லாமிய திருமண விழாவில் சென்று, இந்துக்களின் திருமணத்தைக் குறித்து இழிவாகப் பேசி, அதனால் பலரது கண்டனங்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். மேலும், இஸ்லாமிய கிறிஸ்துவ நிதி உதவிகளின் பின்னணியில் ஓர் ஏஜெண்டாக இயங்கி வரும் திருமாவளவனின் சனாதனத்தை வேரறுப்போம் என்ற மாநாட்டில் கலந்து கொண்டு, இந்து மதத்துக்கு எதிரான கருத்துகளையும் பேசினார். இதனால் இந்துக்கள் பலர் கொதிப்படைந்தனர். இதைக் கேட்டு, திமுக.,வில் இருக்கும் உணர்வுள்ள இந்து தொண்டர்களே கட்சியை விட்டு விலகி, கடிதம் கொடுத்து திமுக.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

இந்நிலையில், திமுக.,வுக்கு மக்களின் செல்வாக்கு சரிந்து வருகிறது என்ற தகவலும், இருக்கின்ற இஸ்லாமிய ஓட்டு வங்கி சில பிரிவுகளாகப் பிரிந்துவிடும் என்ற அரசியல் கணக்கும் இப்போது ஸ்டாலினை இப்படி ஒரு கண்டனத்தைத் தெரிவிக்கத் தூண்டியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இதனிடையே, சமூக வலைத்தளங்களில் இந்த டிவிட் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலினா இப்படி ஒரு டிவீட் போட்டிருப்பது, இருக்காது என்றும், அது ஏதாவது போலி தள செய்தியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்தனர். சிலர், அட்மின் தவறுதலாகப் போட்டுவிட்டார் என்று ஏற்கெனவே இது போல் போட்டு தூக்கிவிட்டது போல், இந்த முறையும் ஆகிடப் போவுது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories