December 6, 2025, 7:35 AM
23.8 C
Chennai

ஆரியங்காவு அருகே கேரள வனப்பகுதியில் காட்டுத் தீ

IMG 20190227 WA0000 - 2025

நெல்லை: தமிழக – கேரள மாநிலங்களின் எல்லைப் பகுதியான ஆரியங்காவு வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

இந்த காட்டுத் தீ மளமளவென அடர்ந்த விலையுயர்ந்த மரங்கள் நிரம்ப பெற்ற தேக்கு மரங்கள் உள்ள வனப்பகுதியில் வேகமாக பரவியது. வேகமாக பரவிய காட்டும் தீ தொடர்ந்து தரைப்பகுதியில் இருந்து மலை உச்சிவரை பல கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதியில் கொழுந்து விட்டு, வேகமாக பரவி வருகிறது.

தற்போது வரை காட்டுத் தீயை அணைக்கும் பணியில் கேரள வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி ஆரியங்காவு தர்ப்பகுளம் பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டு ஏராளமான அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகின.

தற்போது தீ பற்றியுள்ள வனப்பகுதியில் அரிய வகை உயிரினங்கள், சிறுத்தை, காட்டுப்பன்றி,மிளா,உடும்பு உள்ளிட்ட பல்வேறு விதமான அரிய வகை விலங்கினங்கள் வசித்து வருகின்றன.

காட்டுத் தீ காரணமாக வேறு இடங்களுக்கு விலங்குகள் சென்று இருக்க கூடும் என்று கருதப்படுகிறது.

மேலும், அங்குள்ள விலங்கினங்கள், ஊர்வன வகைகள் தமிழக வனப்பகுதிக்குள் வரும் அபாயமும் உருவாகியுள்ளது.

அடர்ந்த வனப்பகுதியில் சில சமூக விரோதிகள் மரங்களை வெட்டி கடத்துவதற்காக வனத்தை தீயிட்டு எரிப்பதாக இயற்கை ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கேரள வனப்பகுதியில் ஒரே மாதத்தில் இரண்டு முறை தீ பற்றிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories