அடம் பிடிக்கிறார் ஆதினம்! அமமுக அதிமுக., இணையுமாம்!

madurai aadheenam press meet stills 12 - 2026

அதிமுகவில் டிடிவி தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருகிறது; தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் தினகரன் இணையும் காலம் வரும் என்று மீண்டும் உறுதியாகக் கூறியிருக்கிறார் மதுரை ஆதினம்.

ஏற்கெனவே மதுரை ஆதினம் இது குறித்துப் பேசியிருந்தார். அதிமுக.,வுடன் அமமுக., இணையும். அதற்கான பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடைபெற்று வருகின்றது. தேர்தலுக்குப் பின் அது சாத்தியமாகும் என்று கூறியிருந்தார். ஆனால்,  அதிமுகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என தினகரன் மறுப்பு தெரிவித்தார்.

அதிமுக.,வுடன் இணைவதற்கான சாத்தியமே இல்லை என்றும், அப்படி எந்தப் பேச்சுவார்த்தையும் திரை மறைவிலும் நடைபெறவில்லை என்றும் கூறினார் டிடிவி தினகரன். இது அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காரணம், மோடி எதிர்ப்பாளர், பாஜக., எதிர்ப்பாளர், மாநில அரசை நடத்தி வரும் அதிமுக., எதிர்ப்பாளர் என்ற அளவில் கட்சியை நடத்தி வருகிறார் டிடிவி தினகரன். இதே போன்ற நிலைப்பாடுள்ள திமுக., உள்ளிட்ட கட்சிகளுடனோ, கூட்டணியிலோ அவர் சேரவுமில்லை.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

அதே நேரம், ஆதினமோ, எப்போதுமே திமுக,வுக்காக தரகு வேலை பார்ப்பார். கருணாநிதி இருந்தவரை கருணாநிதிக்காக ஆதரவுக் கருத்துகளைத் தெரிவித்து வந்தார். ஆனால், இம்முறை திடீரென தடம் மாறி, அதிமுக., வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். திமுக.,வின் இந்து விரோத நிலைப்பாடுகள், பிற மதத்தினருக்கு வலிய வந்து எல்லாம் செய்வது, இந்து மக்களின் நம்பிக்கைகளை இழிவு படுத்துவது என அரசியல் நடத்தி வரும் திமுக.,வை ஆதினம் இந்த முறை கைகொடுக்கவில்லை என்கிறார்கள்!

ஆனால், திமுக.,வின் அதிகாரபூர்வ பத்திரிகையில் வேலை செய்த அனுபவம் பெற்றவர் மதுரை ஆதீனம். இருப்பினும், அதிமுக., பாஜக., கூட்டணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அதுவே பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. .இந்நிலையில் ஆதீனம் மீண்டும் இவ்வாறு டிடிவி தினகரன் அதிமுகவில் ஐக்கியமாகிவிடுவார் என்று கருத்து  தெரிவித்திருப்பது பலருக்கும் சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories