புது வாழ்வுத் திட்டம் சார்பில் நாமக்கல்லில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

Published:

கரூர்: புதுவாழ்வுத் திட்டம் சார்பில் நாமக்கல்லில் சனிக்கிழமை இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்ட புதுவாழ்வு திட்டம் சார்பில், எம்.ஆர்.எப்., எல்&டி நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள இளங்கோ திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.30 மணிக்கு துவங்கி மாலை 3 மணி வரை நடக்கும் இம்முகாமில் 18 வயது முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் ஐந்தாம் வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை கல்வி தகுதி உள்ளவர்கள் பங்கேற்கலாம். அவ்வாறு வரும் இளைஞர்கள், தங்களது கல்வி கல்வி சான்றிதழின் அசல் மற்றும் நகலுடன் பங்கேற்க வேண்டும்.

Related articles

Recent articles

spot_img