வேண்டுமென்றே தமிழர்களை சுட்டுக் கொன்றுள்ளனர்: நடிகை ரோஜா ஆதங்கம்

Published:

roja-actressசென்னை: ஆந்திர வனப் பகுதியில் செம்மரம் வெட்டியதாக 20 தமிழர்களை வேண்டும் என்றே ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர் என்று நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். ஏப்.7ம் தேதி திருப்பதி வனப் பகுதியில் செம்மரம் வெட்டியதாக 20 தமிழர்கள் ஆந்திர போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கும் தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆந்திர போலீஸார் வேண்டும் என்றே 20 தமிழர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக நடிகை ரோஜா கூறியுள்ளார். திருத்தணியில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, திருப்பதி வனப் பகுதியில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்களை ஆந்திர மாநில அரசு உத்தரவுப்படி போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். ஆந்திர சிறப்பு படை போலீஸார் வேண்டுமென்றே தொழிலாளர்களை சுட்டுக்கொன்று விட்டு, ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட பழைய செம்மரங்களை வரிசையாகப் போட்டுள்ளனர்” என்று கூறினார்.

Related articles

Recent articles

spot_img