புதுதில்லி: இந்தியாவில் வேளாண்மைத் துறையில் விவசாயிகள் தங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் அவர்கள் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டது என்றும், இதை அரசு தடுக்க வேண்டும் என்றும் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் விவசாயிகளின் தற்கொலையைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்று பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

