சிரியாவில் நில கண்ணிவெடி தாக்குதலில் 7 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

BAM PELS 2 - 2026

சிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 15ந்தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 9வது ஆண்டாக நடந்து கொண்டு இருக்கிறது.

இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரும் அரசுக்கு எதிராக வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிரிய நாட்டில் டெய்ர் அல் ஜாவ்ர் நகரில் தப்லான் பகுதியில் நில கண்ணிவெடிகள் ஐ.எஸ். அமைப்பினரால் புதைக்கப்பட்டு உள்ளன.

அவர்களை விரட்டிவிட்டு அப்பகுதியை அரசு கைப்பற்றியது. இதன்பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக அவற்றை நீக்கும் பணியில் அரசு தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவர்கள் விட்டு சென்ற இடத்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலகண்ணிவெடி ஒன்று திடீரென வெடித்துள்ளது.

இதில் 7 குழந்தைகள் உடல் சிதிறி பரிதாபமாக இறந்தனா். முன்னதாக. கடந்த ஏப்ரல் 11ந்தேதி, சிரியாவின் தெற்கே நில கண்ணிவெடி ஒன்று வெடித்ததில் 3 குழந்தைகள் பலியாகினர். மற்றொரு குழந்தை காயமடைந்தது.

இதேபோன்று சிரியாவின் வடக்கே அலெப்போ நகரில் கடந்த மார்ச் 6ந்தேதி நில கண்ணிவெடி ஒன்று வெடித்து 7 பேர் கொல்லப்பட்டனர்.

அதே அலெப்போ நகரில் மார்ச் இறுதியில் மற்றொரு கண்ணிவெடி தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.

கடந்த பிப்ரவரி 24ந்தேதி சிரியாவின் மத்திய பகுதியில் இதேபோன்று நடந்த மற்றொரு கண்ணிவெடி தாக்குதலில் பொதுமக்களில் மொத்தம் 24 பேர் கொல்லப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories