சிரியாவில் நில கண்ணிவெடி தாக்குதலில் 7 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

BAM PELS 2 - 2026

சிரியாவில் 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 15ந்தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே தொடங்கிய உள்நாட்டுப்போர் தொடர்ந்து 9வது ஆண்டாக நடந்து கொண்டு இருக்கிறது.

இதில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினரும் அரசுக்கு எதிராக வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிரிய நாட்டில் டெய்ர் அல் ஜாவ்ர் நகரில் தப்லான் பகுதியில் நில கண்ணிவெடிகள் ஐ.எஸ். அமைப்பினரால் புதைக்கப்பட்டு உள்ளன.

அவர்களை விரட்டிவிட்டு அப்பகுதியை அரசு கைப்பற்றியது. இதன்பின்னர் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக அவற்றை நீக்கும் பணியில் அரசு தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவர்கள் விட்டு சென்ற இடத்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலகண்ணிவெடி ஒன்று திடீரென வெடித்துள்ளது.

இதில் 7 குழந்தைகள் உடல் சிதிறி பரிதாபமாக இறந்தனா். முன்னதாக. கடந்த ஏப்ரல் 11ந்தேதி, சிரியாவின் தெற்கே நில கண்ணிவெடி ஒன்று வெடித்ததில் 3 குழந்தைகள் பலியாகினர். மற்றொரு குழந்தை காயமடைந்தது.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

இதேபோன்று சிரியாவின் வடக்கே அலெப்போ நகரில் கடந்த மார்ச் 6ந்தேதி நில கண்ணிவெடி ஒன்று வெடித்து 7 பேர் கொல்லப்பட்டனர்.

அதே அலெப்போ நகரில் மார்ச் இறுதியில் மற்றொரு கண்ணிவெடி தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.

கடந்த பிப்ரவரி 24ந்தேதி சிரியாவின் மத்திய பகுதியில் இதேபோன்று நடந்த மற்றொரு கண்ணிவெடி தாக்குதலில் பொதுமக்களில் மொத்தம் 24 பேர் கொல்லப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories