தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளை கொஞ்சம் கவனிக்கலாமே?

Published:

புதுக்கோட்டை: தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை பொறுத்தவரைக்கும் எப்போதுமே தங்களிடைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது என்பது நிதர்சனம் எந்த சலுகைகளையும் அரசிடம் இருந்து பெறவேண்டும் என்றால் போராடித்தான் ஆகவேண்டும் என்ற சூழ்நிலை கால காலமாக நடந்து வருகிறது முன்பு இவர்களுக்கு ஊதியம் வங்கிகளில் தானாக ஏறிவிடும். ஆனால் இப்போது அந்தந்ந உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம் மூலமாக ஒவ்வொரு பெயரையும் இணையதளத்தில் ஏற்றி அனுப்பவேண்டும் சில அலுவலங்களில் இணையதளம் இருப்பதில்லை அப்படி இருந்தாலும் கணினிஇயக்கும் பணியாளர்கள் இல்லை அதனால் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவர் தனியார் இணையதள மையங்களில் போய் ஏற்றி அனுப்பவேண்டிய கட்டாயம் உள்ளது இதனால் ஊதியம் உரிய நேரத்தில் ஏறுவதில்லை அதைவிட சில இடங்களில் உதவித்தொடக்ககல்வி அலுவலகத்தில் சம்பளம் ஏற்றுவதற்கு 200வீதம் ஆசிரியர்களிடம் வசூல் செய்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது பெண் ஆசிரியர் ஓருவர் 6மாதம் மகப்பேறு விடுப்பில் செல்லும் அந்த இடத்தை நிரப்புவதில்லை. இதனால் கற்பித்தலில் பின்னடைவு ஏற்படுகிறது தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டுவிழா கொண்டாடுவதற்கு அனைவருக்கும் கல்விஇயக்கம் மூலம் 2.250வீதம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு இது கிடையாது நவீன கற்பித்தல் முறையை வகுப்பறையில் மேற்கொள்ளுவதற்கு மடிக்கணினி கிடையாது மற்ற பள்ளிகளுக்கு 200நாட்கள் தான் பள்ளி வேலை நாட்கள் ஆனால் இவர்களுக்கு 220நாட்கள் போன்ற எண்ணற்ற குளறுபடிகளால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தவிக்கின்றனர் . இது குறித்து ஓரு தலைமைஆசிரியர் கூறியது: ஓரு குழந்தை தன்னுடைய வாழ்நாளில் எப்படி உருவாகவேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பது தொடக்க கல்விதான். ஆனால் அந்த தொடக்கல்விக்கு என்ன மரியாதை கொடுக்கவேண்டும் என்பதை அரசு தவறவிடுகிறது நாங்கள் வாழ்நாள் முழுவதும் போராடிக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால் எப்போது தான் விடிவும் பிறக்கும் என்பது தெரியவில்லை என்றார் செய்தி: பொ.ஜெயச்சந்திரன், புதுக்கோட்டை

Related articles

Recent articles

spot_img