தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளை கொஞ்சம் கவனிக்கலாமே?

புதுக்கோட்டை: தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை பொறுத்தவரைக்கும் எப்போதுமே தங்களிடைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது என்பது நிதர்சனம் எந்த சலுகைகளையும் அரசிடம் இருந்து பெறவேண்டும் என்றால் போராடித்தான் ஆகவேண்டும் என்ற சூழ்நிலை கால காலமாக நடந்து வருகிறது முன்பு இவர்களுக்கு ஊதியம் வங்கிகளில் தானாக ஏறிவிடும். ஆனால் இப்போது அந்தந்ந உதவித்தொடக்கக்கல்வி அலுவலகம் மூலமாக ஒவ்வொரு பெயரையும் இணையதளத்தில் ஏற்றி அனுப்பவேண்டும் சில அலுவலங்களில் இணையதளம் இருப்பதில்லை அப்படி இருந்தாலும் கணினிஇயக்கும் பணியாளர்கள் இல்லை அதனால் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவர் தனியார் இணையதள மையங்களில் போய் ஏற்றி அனுப்பவேண்டிய கட்டாயம் உள்ளது இதனால் ஊதியம் உரிய நேரத்தில் ஏறுவதில்லை அதைவிட சில இடங்களில் உதவித்தொடக்ககல்வி அலுவலகத்தில் சம்பளம் ஏற்றுவதற்கு 200வீதம் ஆசிரியர்களிடம் வசூல் செய்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது பெண் ஆசிரியர் ஓருவர் 6மாதம் மகப்பேறு விடுப்பில் செல்லும் அந்த இடத்தை நிரப்புவதில்லை. இதனால் கற்பித்தலில் பின்னடைவு ஏற்படுகிறது தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளில் ஆண்டுவிழா கொண்டாடுவதற்கு அனைவருக்கும் கல்விஇயக்கம் மூலம் 2.250வீதம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு இது கிடையாது நவீன கற்பித்தல் முறையை வகுப்பறையில் மேற்கொள்ளுவதற்கு மடிக்கணினி கிடையாது மற்ற பள்ளிகளுக்கு 200நாட்கள் தான் பள்ளி வேலை நாட்கள் ஆனால் இவர்களுக்கு 220நாட்கள் போன்ற எண்ணற்ற குளறுபடிகளால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தவிக்கின்றனர் . இது குறித்து ஓரு தலைமைஆசிரியர் கூறியது: ஓரு குழந்தை தன்னுடைய வாழ்நாளில் எப்படி உருவாகவேண்டும் என்பதை சொல்லிக் கொடுப்பது தொடக்க கல்விதான். ஆனால் அந்த தொடக்கல்விக்கு என்ன மரியாதை கொடுக்கவேண்டும் என்பதை அரசு தவறவிடுகிறது நாங்கள் வாழ்நாள் முழுவதும் போராடிக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால் எப்போது தான் விடிவும் பிறக்கும் என்பது தெரியவில்லை என்றார் செய்தி: பொ.ஜெயச்சந்திரன், புதுக்கோட்டை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories