நெல்லை மாவட்டம், தென்காசி நகராட்சியில் இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை குற்றால குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என தென்காசி நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி குடிநீர் மூலமாக அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகிக்கப்படும் குற்றால வடிகால் நீர் தேக்கத்தில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



