February 22, 2026, 6:26 AM
25.4 C
Chennai

ரூ.13 லட்சம் நகை மோசடி; தொழிலாளி இருவர் கைது…!

criam 1 - 2026

கோவையில் நகை கடை முதலாளியை ஏமாற்றி 450 கிராம் தங்க நகைகளை மோசடி செய்து திருடிய கடை ஊழியர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை உள்ள செல்வபுரத்தை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் (41). இவர், வைசியாள் வீதியில் நகைகள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

சங்கரேஸ்வரன் வெளியில் தங்கக்கட்டிகளை வாங்கி, அதை தங்கப்பட்டறைகளில் கொடுத்து ஆபரணங்களாக செய்து வாங்கி, அந்த ஆபரணங்களை தன் ஊழியர்கள் மூலம் ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி, 5 கிலோ எடை கொண்ட ஆபரணங்களை அவரது ஊழியரான வேலாண்டிபாளையத்தை சேர்ந்த சண்முகவேல் (45) என்பவரிடம் கொடுத்து சத்தியமங்கலத்தில் உள்ள நகைகடைகளில் விற்பனை செய்துவருமாறு கூறியுள்ளார்.

அதன்படி, வியாபாரத்தை முடித்து விட்டு வந்த சண்முகவேல், ஒரு கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக கூறி மீதமுள்ள 4 கிலோ தங்க நகைகளை ஒப்படைத்துள்ளார்.

ஆனால் அவர், கொடுத்த ஆபரணங்களில், ரூ.13 லட்சம் மதிப்புடைய 450 கிராம் தங்க நகை குறைவாக இருந்துள்ளது.

இது தொடர்பாக உரிமையாளர் சண்முகவேலிடம் கேட்ட போது முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளார் இதில் சந்தேகமடைந்த சங்கரேஸ்வரன் கடைவீதி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ஊழியர் சண்முகவேலுடன், ஆறுமுகம் என்பவரும் இணைந்து நகைகளை திருடி அவற்றை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களிடம் இருந்த 400 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஐந்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories