நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 2,583 பேர் தேர்ச்சி – அமைச்சர் செங்கோட்டையன்

sengottaian - 2026
நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 2 ஆயிரத்து 583 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

‘நீட்’ தேர்வில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் தமிழகத்தின் நோக்கம். அதை தான் சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்தி வருகிறோம்.

இருந்தாலும், தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில் 413 மையங்களில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டும் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது. இந்த ஆண்டும் அதேபோல், பயிற்சி அளித் தோம். அதன் மூலம் நீட் தேர்ச்சி சதவீதத்தை பார்க்கும்போது, உயர்ந்து இருக்கிறது. ஆண்டுக்காண்டு நீட் தேர்வு பயிற்சி மூலம் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 2,583 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பயிற்சியும், முயற்சியும் இருந்தால், தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்தில் யார் வேண்டும் என்றாலும், வென்றுவிடலாம். பயிற்சியும், முயற்சியும் முக்கியம். இந்த இரண்டும் மாணவர்களுக்கு இருந்தால் போதும்.

கிராமப்புற மாணவர்களுக்காக நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே இலவசமாக நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான். வேறு எங்கும் இந்த திட்டம் இல்லை. ஏறத்தாழ 2,100 மாணவர்களுக்கு 9 கல்வி நிறுவனங்களில் 21 நாட்கள் முழுமையாக நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

கல்வித்துறையை பொறுத்தவரையில், முதல்-அமைச்சர் ஒத்துழைப்போடு பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகிறோம். தேர்ச்சி பெற்ற 2 ஆயிரத்து 583 பேரில், 400 மதிப்பெண் மற்றும் 300 முதல் 400 மதிப்பெண் வரை எடுத்த மாணவ-மாணவிகள் 39 பேர் ஆகும்.

உத்தரபிரதேச மாநில துணை முதல்-மந்திரி தினேஷ் சர்மா சென்னை வந்திருந்தார். அவர் நம்முடைய கல்வி முறையை பார்த்து வியந்து போனார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் திறந்து வைக்க இருக்கிற கல்வி தொலைக்காட்சியையும், அண்ணா நூலகத்தையும் பார்த்தார்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

அப்போது உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், தன்னுடைய ஆராய்ச்சி படிப்புக்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்துவதாக அவரிடம் தெரிவித்தார். நம்முடைய பாடத்திட்ட முறையையும் அவர் பார்த்தார். இரு மாநிலங்களும் இணைந்து கல்வி முறையில் என்னென்ன திட்டங்களை கொண்டு வரலாம் என்பது குறித்து எடுத்து சொன்னார்.

நீட் தேர்வு பயிற்சி பெற ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை செலவு ஆகும். ஆனால் தமிழக அரசு ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இதில் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கே முன்னுரிமை அதிகம் வழங்கப்படும்.

மாணவர்களுக்கு நம்பிக்கை என்பது தேவை. தனியார் பயிற்சி நிறுவனத்துடன் ஈடுகொடுக்க முடியுமா? என்று சொன்னார்கள். அரசின் இலவச பயிற்சியை பார்த்து தற்போது பல மாணவர்கள் அரசை பாராட்டி இருக்கிறார்கள். இந்த திட்டம் தொடரும். படிப்படியாக தான் உயர்த்த முடியும். 3-வது ஆண்டில் (2020-ம் ஆண்டு) குறைந்தது 5 ஆயிரம் மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வாய்ப்பு இருக்கிறது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories