December 6, 2025, 8:09 PM
26.8 C
Chennai

தமிழக பள்ளி மாணவர்களுக்கு நவீன தொழல்நுட்ப கையடக்க ‘ஸ்மார்ட் கார்டு’

sengottaian - 2025அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டை ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நாளை மறுநாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த பள்ளிக் கல்வித்துறை பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. பாடப்புத்தகம் முதல் சைக்கிள், மடிக்கணினி வரை இலசமாக வழங்கப்படுகிறது.

மேலும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் அனைத்து வசதிகளையும் பெற அடிப்படையான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு தரம் உயர்த்தப்படுகின்றன.

இந்த வருடம் 8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் புதிய பாடத் திட்டங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

edappadi palanisamy2 - 2025

தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியும் அவர்களின் விருப்பத்தின்படி இந்த அடையாள அட்டையினை வடிவமைத்து வழங்குகின்றன. இதற்காக மாணவர்களிடம் இருந்து சிறிய தொகையும் பெறப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அடையாள அட்டை ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நாளை மறுநாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார். இந்த அடையாள அட்டையில் மாணவர்கள் பற்றிய முழு விவரங்கள் இடம்பெறுகின்றன.

மாற்று சான்றிதழில் உள்ள முக்கிய தகவல்கள் ஸ்மார்ட் கார்டில் அச்சடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு பள்ளிக்கல்வி துறை சார்பில் வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த ஸ்மார்ட் கார்டில் பல்வேறு சிறப்புகள் அமைந்துள்ளன.

school giral 8 - 2025

மாணவரின் பெயர், தந்தை பெயர், யூனிக் அடையாள அட்டை எண், பள்ளியின் பெயர், மாணவரின் முகவரி, பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவை இடம் பெறுகிறது. இது தவிர ‘‘கியூ-ஆர் கோடு’’ என்று சொல்லக்கூடிய நவீன தொழில் நுட்பமும் இதில் இடம்பெறுகிறது. கியூ-ஆர் கோடினை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்து மாணவர்கள் பற்றிய முழு விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இதன் மூலம் வெப்சைட்டிலும் எளிதாக மாணவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த அடையாள அட்டை தவறினால் கூட மாணவர் பற்றிய தகவல்களை பெற முடியும்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குனர் ராமேஸ்வர முருகன் உள்ளிட்ட அதிகாரிகளின் தீவிர முயற்சியால் ஸ்மார்ட் கார்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories