பிரளயம் வெடிக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது : ஜெயக்குமார்!

Published:

governor eps - 2026

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை என்பது அவசியமற்ற சர்ச்சை என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், எதிரிகளின் எண்ணத்தில் மண் விழும் வகையில் நேற்றைய கூட்டம் எவ்வித பிரச்னையுமின்றி அமைதியாக நடைபெற்று முடிந்தது என்று கூறினார்.

சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாந்தோம் சாலையில், எம்எல்ஏ நட்ராஜின் தொகுதி நிதியில், 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டுள்ளது. இதை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்து, உடற்பயிற்சி செய்து பார்த்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், நேற்றைய அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு வராதவர்கள் அதற்கான காரணத்தை முன்கூட்டியே தலைமையிடம் தெரிவித்துவீட்டதாகக் கூறினார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது தேவையில்லாத சர்ச்சை என்றும், இது தொடர்பாக நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் ஏதோ பெரிய பிரளயமே வெடிக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

ஆளுநரை முதலமைச்சர் சந்தித்தது வழக்கமான, மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பதிலளித்தார் ஜெயக்குமார் !

Related articles

Recent articles

spot_img