காலையில் விலகல்; மதியம் விலகலுக்கு விலகல்! பிறகு முடிவு வாபஸ்! ஜெ.தீபாவால் இன்று கலகல..!

deepa madhavan - 2026

கனடா பிரதமரின் வேண்டுகோளை ஏற்று அரசியலில் இருந்து விலகும் தனது முடிவை வாபஸ் பெற்றார் #ஜெ_தீபா என்று கலாய்க்கிறார்கள் சமூகத் தளங்களில்!

ஒவ்வொரு நாளும் பொழுது போகவும் போக்கவும் ஏதாவது ஒன்று சமூக வலைத்தளவாசிகளுக்கு கிடைத்து விடுகிறது. வெச்சி செய்வது என்ற ரீதியில் பொழுது போக இன்று கிடைத்த வெறும்வாய்க்கு மெல்லும் அவல் மேட்டர்தான் ஜெ.தீபாவின் அரசியல் அதிரடி கலகல காமெடி!

இன்று பேஸ்புக், ஜெதீபா பெயர்களால் நிரம்பிவழிந்தது. புயலென அரசியல் களத்தில் உள்ளே புகுந்து, வலுவிழந்த காற்றாய் புஸ்ஸாகிப் போனதில் ஜெதீபா முதன்மையானவர். ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து உள்ளே வந்தவர், கால ஓட்டத்தில் காணாமல் போனார். ஆனால், அவர் வந்த வேகத்தில் அவருக்காக பட்டுக் கம்பளம் விரித்து, பூக்களை அள்ளித் தெளிப்பது போல், பணத்தை வாரியிறைத்தவர்கள் எல்லாம் வாரிச்சுருட்ட நேரம் பார்த்தார்கள்! இப்போது திடீரென காலை பின்னுக்கு இழுத்தால் பின்னே வந்தவர்கள் என்ன செய்வார்கள்?!

இன்று ஜெ_தீபா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு, அவரது பெயரிலான பேரவையினருக்கு அதிர்ச்சியைத் தந்தது. அதே நேரம், இன்று செம காமெடி இருக்கு என்று பேஸ்புக்வாசிகளுக்கு உற்சாகத்தைத் தந்தது.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

deepa jayakumar - 2026முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன் என்று, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பேஸ்புக் பக்கத்தில் திடீர் அறிவிப்பு வெளியிட்டார்.

அதில், யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்; எனக்கென்று குடும்பம் உள்ளது, அதுதான் எனக்கு முக்கியம்! குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை! ஏன் என்னைக் காலையிலேயே தொந்தரவு செய்கிறீர்கள் என்று தனது ஆதரவாளர்களுக்கு ஜெ_தீபா கேள்வி எழுப்பினார்.

மேலும், ஜெ.தீபா பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன், விருப்பம் இருந்தால் அந்தக் கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள்! தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதை இதோடு நிறுத்த வேண்டுகிறேன் என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இது ஆதரவாளர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடுத்த காச திருப்பி கேட்டா என்ன நடக்கும்னு கோடு காட்டிச்சு போல… என்று இந்த முடிவுக்கு அர்த்தம் கொடுத்தார்கள்.

இந்நிலையில், பேரவையைக் கலைக்க வேண்டாம் என்று நிர்வாகிகள், ஜெ.தீபாவுக்கு அழுத்தம் கொடுத்தார்கள். இதனால் மனம் மாறியதால்தான், ஜெ.தீபா, அரசியலில் இருந்து முற்றிலும் விலகுகிறேன் என்று வெளியிட்ட அறிவிப்பை தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கினார் என்கிறார்கள்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இதை அடுத்து, கனடா பிரதமரின் வேண்டுகோளை ஏற்று அரசியலில் இருந்து விலகும் தனது முடிவை வாபஸ் பெற்றார் #ஜெ_தீபா என்று கலாய்க்கிறார்கள் சமூகத் தளங்களில்!

ஒருவேளை விலகும் முடிவு இருந்தால், கணவரான மாதவனிடமே விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு, ஒதுங்கிக் கொண்டிருக்கலாமே என்று கலகலக்கிறார்கள் சிலர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெ.தீபா, நான் அரசியலுக்கு வந்ததால், நெருக்கடி வேதனை ஏற்பட்டது. பெண்கள் அரசியலில் இருக்க வேண்டும் என்றால் தரக் குறைவான விமர்சனம் இருக்கக் கூடாது. கட்சி தொடங்கிய பிறகு என்னை ஏமாற்றிவிட்டனர்.
என்னை வழிநடத்த சரியான நபர்கள் எவரும் இல்லை! இனிமேல் எப்போதும் நான் அரசியலுக்கு வர மாட்டேன். ஜெயலலிதா சொத்துக்கு ஆசைப்பட்டது இல்லை. சொத்து வேண்டும் என்றால் நான் அப்போதே கேட்டிருப்பேன்.

என் வீட்டின் முன் நின்று, என்னைக் கட்டாயப்படுத்தி அழைத்ததால்தான் நான் அரசியலுக்கு வந்தேன். அரசியலுக்கு வந்ததே தவறு என பல முறை யோசித்துள்ளேன். இனி அரசியல் எனக்கு வேண்டாம்… என்று கூறினார்.

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories