கால்நடைகளை வெள்ளம் இழுத்துச் செல்லும் பரிதாபம் !

Published:

flood - 2026மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்த கனமழையால் பல அணைகளில் நீர்மட்டம் மேல் கொள்ளளவை எட்டியுள்ளது.

பல ஆறுகளிலும் நதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதனால் நதிக்கரையோரம் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் ,சந்திரபூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் பல கால்நடைகள் அடித்துச்செல்லப்படும் வீடியோ ஒன்று தற்போது செய்தி ஊடகங்களில் பரவி வருகிறது. இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img