புத்திர பாக்கியம் தரும் அரச மரம்.. ஆனால் எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?!

arasa maram - 2026அரச மரத்தை வழிபடும் வழக்கம் இந்துக்களிடையே பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது.

சிந்து சமவெளி நாகரிக காலத்திலேயே அரச மர வழிபாடு இருந்ததாக கருதப்படுகிறது. அரச மரத்தின் கீழ் அமர்ந்துதான் புத்தர் ஞானமடைந்ததாக கூறப்படுகிறது. எனவே அரச மரத்தை போதிமரம் எனவும் குறிப்பிடுவர். இந்துக்களும்,பௌத்த மதத்தினரும் அரச மரத்தை புனிதமாக கருதுகின்றனர்.

மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்என பகவத் கீதையில் கண்ணன் குறிப்பிடுகிறார். அரசமரத்தடியில் விஷ்னு பகவான் பிறந்ததாகவும், அசுரர்களிடம் தேவர்கள் தோற்றுப்போன நேரத்தில் விஷ்னு பகவான் அரசமரத்திற்குள் ஒழிந்திருந்ததாகவும்,கிருஷ்ணர் அரச மரத்தடியில் இறந்ததாகவும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச மரத்தை வெட்டுவது பிரம்மஹத்தி தோசத்திற்கு சமமானது என ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது. ஹோமங்களில் அரசமர குச்சிகளை சமிதாக பயன்படுத்துவர்.

ஹோமாதி காரியங்களைத்தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் அரசமரத்தை வெட்டக்கூடாது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அரச மரத்தை குழந்தையாக பாவிக்க வேண்டும் என ஸ்கந்த புராணம் குறிப்பிடுகிறது.

ALSO READ:  மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

ஜோதிடத்தில் குரு கிரகத்தை புத்திர காரகன் என குறிப்பிடுவர். பூசம் நட்சத்திரத்தில் உச்சமடையும் கிரகம் குருவாகும். பூசம் நட்சத்திரத்திற்குரிய விருட்சம்(மரம்) அரசமரமாகும். அதாவது அரச மரத்தில் குரு கிரகத்தின் ஆற்றல் அதிகபட்சமாக உள்ளது.

எனவே அரச மரத்தை பெண்கள் சுற்றிவந்தால் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது வெறும் நம்பிக்கை மட்டும் அல்ல, அது உண்மையே. அரசமரத்தை சுற்றுவதால் பெண்களின் கருப்பை சம்பந்தமான கோளாருகள் நீங்குவதாக கூறப்படுகிறது.

நாம் சுவாசிக்கும் காற்றுக்கு பிராண வாயு என்று பெயர். பிராண வாயுவை அதிக பட்சமாக வெளியிடும் மரம் அரசமரமே. பிராண வாயு இல்லாமல் யாரும் உயிரோடு இருக்க முடியாது. நாடி ஜோதிடத்தில் குரு கிரகத்தை ஜீவக்காரகன் என குறிப்பிடுவர். ஜீவன் என்றால் உயிர் என்று பொருள்.

அரசமரத்தை சுற்றும்போது பிராண வாயு அதிக அளவில் கிடைப்பதால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், ஆயுள் அதிகரிக்கும்.

ஜோதிடத்தில் குரு கிரகத்தை புண்ணியக்காரகன் என குறிப்பிடுவர். குரு கிரகம் உச்சமடையும் அரச மரத்தை நட்டு வளர்த்து வந்தால் பல தலைமுறைகளுக்குஅந்த புண்ணியம் போய்சேரும். அரசமரத்தை வெட்டுபவன் தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் இழப்பான், அவன் சந்ததிகள் அழிந்து போகும்.

ALSO READ:  வேளச்சேரி - பிருங்கிமலை எம்ஆர்டிஎஸ்., ரயில் சேவை! பயணிகள் மகிழ்ச்சி!

சூரிய சக்தியை அதிக அளவில் சேமித்து வைக்கும் மரம் அரசமரமாகும். சூரியனின் ஆற்றலும், குரு கிரகத்தின் ஆற்றலும் ஒன்றிணைவதால் தான் உலகத்தில் உயினங்கள் தோன்றுவதாக அறிவியலார் குறிப்பிடுகின்றனர்.

குரு,சூரிய சேர்க்கையை சிரஞ்சீவி யோகமென நாடி ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. குரு ஆற்றலும்,சூரிய ஆற்றலும் ஒருங்கே நிரம்பி வழியும் மரம் அரசமரம்,எனவே அது ஒரு ஜீவ விருட்சமாகும்.

அந்த ஜீவ விருட்சத்தை சுற்றுவதால் உடலில் ஜீவ ஆற்றல் அதிகரிக்கும். உடலில் ஜீவ ஆற்றல் அதிகமாக இருந்தால் மனம் தெளிவடையும். எண்ணியவை எல்லாம் எளிதில் நிறைவேறும். அரச மரத்தடியில் அமர்ந்து அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதில் கைகூடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories