மின்கசிவால் விபத்து; பிரிட்ஜ் வெடித்து மூச்சுத் திணறலால் டிவி நிருபர், மனைவி, தாயார் என மூவர் உயிரிழப்பு!

prasanna newsj - 2026

சென்னை நியூஸ் ஜெ டிவி.,யில் செய்தியாளராகப் பணியாற்றி வந்த பிரசன்னா, அவரது மனைவி ரேவதி, மாமியார் அா்ச்சனா ஆகியோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, குளிர்சாதனப் பெட்டி வெடித்து ஏற்பட்ட விபத்தில் மூவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.

சென்னை தாம்பரம், சேலையூர் பகுதியில் நள்ளிரவில் பிரிட்ஜ் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மூவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் பகுதியில் வசித்து வந்தவர் பிரசன்னா. இவர், நியூஸ் ஜே டிவியில் நிருபராகப் பணியாற்றி வருகிறார்.

‘நியூஸ் ஜெ’ வின் சென்னை செய்தியாளராகப் பணியாற்றி வந்த பிரசன்னா, தேசிய ஊடகவியலாளர்கள் நலச் சங்கத்தில் பொருளாளராகவும் இருந்தார். தேசிய சிந்தனை கொண்டவராக அறியப் பட்ட பிரசன்னா, பல்வேறு ஊடகங்களிலும் செய்தியாளராகப் பணியாற்றியவர்.

prasanna newsj2 - 2026இவர் நேற்று இரவு வழக்கம் போல் தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அதே வீட்டில் அவரது மனைவி அா்ச்சனா, அவரது தாயார் ரேவதி ஆகியோரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

இந்நிலையில் இரவு நேரத்தில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதாம். தொடர்ந்து மின்கசிவு காரணமாக, வீட்டில் இருந்த பிரிட்ஜ் கம்ப்ரசர் சூடாகி திடீரென வெடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, வீடு முழுவதும் தீ வேகமாக பரவியுள்ளது. அங்கிருந்த பிளாஸ்டிக் பொருள்கள் தீப்பற்றி உருகியுள்ளன. மின்சாரமும் தடைப்பட்டதால், இருட்டில் எதுவும் தெரியாமல் மூவரும் தடுமாறியுள்ளனர்.

வீடு முழுவதும் புகை மண்டலமாக மாறியதால், வீட்டின் அறை உள்ளிருந்து வெளியே வர இயலாமல் புகை மண்டலத்தில் மூவரும் தவித்துள்ளனர். பிரசன்னா அவரது அறையில் இருந்து வெளியே வர முயற்சி செய்து அங்கேயே விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது மனைவி அவரது அறையிலேயே உயிரிழந்துள்ளார். புகை மண்டலத்தில் சிக்கி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

வீடு சாலையில் இருந்து உள்ளே தள்ளி இருந்ததால் தீ விபத்து நடைபெற்றது குறித்து அருகில் இருப்போர் எவருக்கும் தெரியவரவில்லையாம். இன்று அதிகாலை அந்த வழியாகச் சென்றவர்களும் வீட்டுக்கு வேலை செய்ய வந்த பெண்ணும் அந்த வீட்டில் இருந்து புகை வெளியேறியது கண்டு, அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டு வேலை செய்யும் பெண் ஜன்னல் வழியாகப் பார்த்து அதிர்ந்துள்ளார். உடனே, தீயணைப்புத் துறைக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். இதை அடுத்து தீயணைப்புத் துறையினர் வந்து வீட்டில் இருந்தவர்களை மீட்க முயற்சி மேற்கொண்டிருந்தனர். ஆனால், அதற்கு முன் மூவருமே மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசன்னா, மற்றும் குடும்பத்தினரின் மறைவு குறித்து ஊடகத்தினர் மற்றும் ஊடக சங்கங்கள் வருத்தமும் ஆழந்த இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories