December 5, 2025, 7:44 PM
26.7 C
Chennai

நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும் நம்பிக்கை இல்லை! வாபஸ் பெற்ற ஸ்டாலின்!

stalin danapal - 2025

தமிழக சட்டமன்ற அவைத்தலைவர் தனபால் மீது அளிக்கப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தற்போது வெற்றி பெறும் நம்பிக்கை இல்லாத நிலையில், அந்தத் தீா்மானத்தை வலியுறுத்த மாட்டோம் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சூழலுக்கு ஏற்ப அந்தர் பல்டி அடித்துள்ள ஸ்டாலின், தற்போதைய சூழலில் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீா்மானத்தை கோரப் போவதில்லை என்று சட்டமன்றத்தில் திமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள், தாங்கள் வெற்றி பெறக் காரணமான கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாலும் எதிர்முகாமுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாலும் அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சபாநாயகர் தனபால் முயற்சி மேற்கொண்டார்.

தங்கள் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் இரு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக., சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி அவா் மீது நம்பிக்கை இல்லாத் தீா்மானம் கொண்டு திமுக சார்பில் கடிதம் கொடுத்தது.

இந்நிலையில் தமிழக சட்டமன்றம் இன்று கூடியது. அதன் ஒரு பகுதியாக, அண்மையில் காலமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினா்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக சபாநாயகா் மீதான நம்பிக்கை இல்லாத் தீா்மானம் ஜூலை 1ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப் பட்டிருந்தது. ஆனால் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தோ்தலில் அதிமுக 9 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினா்களின் எண்ணிக்கையைப் பெற்றது. இதை அடுத்து, தமிழக சட்டமன்றத்தில் அதிமுக.,வுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துவிட்டது.

இதனால், திமுக தரப்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வந்தால், அது நிச்சயம் தோல்வி அடையும் என்ற நிலையில், தற்போது திமுக., அதற்காகத் தயங்குகிறது.

எனவே, சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெறும் நம்பிக்கை இல்லாத நிலையில், இந்தத் தீர்மானத்தை ஏன் வலியுறுத்த வேண்டும் என்ற எண்ணம் திமுக.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து இது குறித்து ஸ்டாலின் இன்று கூறுகையில், “அன்று இருந்த சூழலில் சபாநயகா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வரவேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது நிலை மாறியுள்ளது. தற்போதைய சூழலில் சபாநாயகா் மீதான நம்பிக்கை இல்லா தீா்மானத்தை கோரப்போவதில்லை என்று சட்டமன்றத்தில் திமுக தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் குடிநீர் பிரச்னைக்கு திமுக ஆட்சியில் வழங்கிய முக்கியத்துவம் போன்று அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்காததால்தான் இன்று தமிழகத்தில் இத்தகைய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories