நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறும் நம்பிக்கை இல்லை! வாபஸ் பெற்ற ஸ்டாலின்!

stalin danapal - 2026

தமிழக சட்டமன்ற அவைத்தலைவர் தனபால் மீது அளிக்கப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தற்போது வெற்றி பெறும் நம்பிக்கை இல்லாத நிலையில், அந்தத் தீா்மானத்தை வலியுறுத்த மாட்டோம் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சூழலுக்கு ஏற்ப அந்தர் பல்டி அடித்துள்ள ஸ்டாலின், தற்போதைய சூழலில் சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீா்மானத்தை கோரப் போவதில்லை என்று சட்டமன்றத்தில் திமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள், தாங்கள் வெற்றி பெறக் காரணமான கட்சிக்கு விரோதமாக செயல்படுவதாலும் எதிர்முகாமுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாலும் அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள சபாநாயகர் தனபால் முயற்சி மேற்கொண்டார்.

தங்கள் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் இரு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக., சபாநாயகரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி அவா் மீது நம்பிக்கை இல்லாத் தீா்மானம் கொண்டு திமுக சார்பில் கடிதம் கொடுத்தது.

இந்நிலையில் தமிழக சட்டமன்றம் இன்று கூடியது. அதன் ஒரு பகுதியாக, அண்மையில் காலமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினா்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக சபாநாயகா் மீதான நம்பிக்கை இல்லாத் தீா்மானம் ஜூலை 1ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப் பட்டிருந்தது. ஆனால் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தோ்தலில் அதிமுக 9 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினா்களின் எண்ணிக்கையைப் பெற்றது. இதை அடுத்து, தமிழக சட்டமன்றத்தில் அதிமுக.,வுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துவிட்டது.

இதனால், திமுக தரப்பில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வந்தால், அது நிச்சயம் தோல்வி அடையும் என்ற நிலையில், தற்போது திமுக., அதற்காகத் தயங்குகிறது.

எனவே, சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெறும் நம்பிக்கை இல்லாத நிலையில், இந்தத் தீர்மானத்தை ஏன் வலியுறுத்த வேண்டும் என்ற எண்ணம் திமுக.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து இது குறித்து ஸ்டாலின் இன்று கூறுகையில், “அன்று இருந்த சூழலில் சபாநயகா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வரவேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது நிலை மாறியுள்ளது. தற்போதைய சூழலில் சபாநாயகா் மீதான நம்பிக்கை இல்லா தீா்மானத்தை கோரப்போவதில்லை என்று சட்டமன்றத்தில் திமுக தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் குடிநீர் பிரச்னைக்கு திமுக ஆட்சியில் வழங்கிய முக்கியத்துவம் போன்று அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்காததால்தான் இன்று தமிழகத்தில் இத்தகைய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories