December 6, 2025, 5:08 AM
24.9 C
Chennai

அம்மா குடிநீர் பாட்டில் இனி மருத்துவமனைகளிலும்!

vijayabhaskar karur - 2025

இனி அம்மா வாட்டர் பேருந்து நிறுத்தம் மற்றும் பேருந்து நிலையங்களில் மட்டுமல்ல, தமிழகத்தின் மருத்துவ மனைகளிலும் கிடைக்கும் என்று கூறினார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்

அப்போது அவர், அம்மா வாட்டர் இயந்திரத்தின் காலம் முடிந்து விட்டதால் உற்பத்தி குறைந்து வருகின்றது – நிறைய பழுதுகளும் ஏற்பட்டு வருவதால் அதை மாற்றி விட்டு புதிய இயந்திரங்கள் அமைக்கும் பணி செயல்படுத்தி வருகின்றோம்

இந்த திட்டம் மிக விரைவில் அறிமுகப் படுத்தப்படும் என்று கூறினார்  தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தி லிருந்து 255 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, சிறப்பித்தார்.

மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கொடுத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்., செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தில் அம்மா வாட்டர் தட்டுப்பாடு ஏற்படுத்துகின்ற, நிலைக்கு காரணம், அந்த உற்பத்தி திறனின் செயல்பாட்டின் கால அளவு முடிந்து விட்டதோடு, அந்த இயந்திரங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டும் வருகின்றது.

3 லட்சம் அளவிற்கு உற்பத்தி செய்யப்படும் நிலையில், 1 ¾ லட்சம் அளவிற்கு தான் தண்ணீர் வந்தது. ஆகவே, 3 லட்சம் அளவிற்கு தற்போது தண்ணீர் இயந்திரங்கள் அமைக்கும் பணி செயல்படுத்தப் பட்டு வருகின்றது. அந்த இயந்திரத்தின் கால அவகாசம் முடிந்து விட்டதால் உற்பத்தி குறைந்து விட்டது.

மேலும், புதிய இயந்திரம் அமைக்கும் பணியும் தொடங்கி மிக விரைவில் மக்கள் நலனுக்காக வரும்.

இனி பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தம் மட்டுமில்லாமல், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழகத்தில் 6 அரசு மருத்துவமனைகளில் முதற்கட்டமாக அம்மா வாட்டர் பாட்டில் இனி ரூ 10க்கு கிடைக்கும் என்றார்.

முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பெற்ற தாய் போல அனைத்து நலத்திட்ட உதவிகளையும் கொடுத்தவர் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆனால் அம்மா நம்மிடையே தற்போது இல்லாத நிலையில், நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அம்மா வழியில் ஆட்சி நடத்தி வருகின்றனர். இனி என்ன செய்ய வேண்டுமென்கின்ற வகையில் பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகின்றார்

உடலில் ஊனம் இருந்து பிறப்பவர்கள் தங்களது சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை, பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கும், ஏராளமான திட்டங்களை தீட்டி, அவர்கள் ஆரம்பக காலத்தில் பள்ளி படித்தும், கல்லூரி படிக்கும் பருவத்திலும், பணிக்கு செல்லும் காலத்திலும் அனைத்து விதமான திட்டங்களை தீட்டி, இந்தியாவிலேயே முன்னோடு மாநிலமாக்கியதோடு, இன்றுவரை பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்து வருகின்றார் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி உள்ளிட்டோர் உடனிந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories