அம்மா குடிநீர் பாட்டில் இனி மருத்துவமனைகளிலும்!

vijayabhaskar karur - 2026

இனி அம்மா வாட்டர் பேருந்து நிறுத்தம் மற்றும் பேருந்து நிலையங்களில் மட்டுமல்ல, தமிழகத்தின் மருத்துவ மனைகளிலும் கிடைக்கும் என்று கூறினார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

கரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்

அப்போது அவர், அம்மா வாட்டர் இயந்திரத்தின் காலம் முடிந்து விட்டதால் உற்பத்தி குறைந்து வருகின்றது – நிறைய பழுதுகளும் ஏற்பட்டு வருவதால் அதை மாற்றி விட்டு புதிய இயந்திரங்கள் அமைக்கும் பணி செயல்படுத்தி வருகின்றோம்

இந்த திட்டம் மிக விரைவில் அறிமுகப் படுத்தப்படும் என்று கூறினார்  தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தி லிருந்து 255 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்தனர்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

இந்நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, சிறப்பித்தார்.

மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கொடுத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்., செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழகத்தில் அம்மா வாட்டர் தட்டுப்பாடு ஏற்படுத்துகின்ற, நிலைக்கு காரணம், அந்த உற்பத்தி திறனின் செயல்பாட்டின் கால அளவு முடிந்து விட்டதோடு, அந்த இயந்திரங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டும் வருகின்றது.

3 லட்சம் அளவிற்கு உற்பத்தி செய்யப்படும் நிலையில், 1 ¾ லட்சம் அளவிற்கு தான் தண்ணீர் வந்தது. ஆகவே, 3 லட்சம் அளவிற்கு தற்போது தண்ணீர் இயந்திரங்கள் அமைக்கும் பணி செயல்படுத்தப் பட்டு வருகின்றது. அந்த இயந்திரத்தின் கால அவகாசம் முடிந்து விட்டதால் உற்பத்தி குறைந்து விட்டது.

மேலும், புதிய இயந்திரம் அமைக்கும் பணியும் தொடங்கி மிக விரைவில் மக்கள் நலனுக்காக வரும்.

இனி பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தம் மட்டுமில்லாமல், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழகத்தில் 6 அரசு மருத்துவமனைகளில் முதற்கட்டமாக அம்மா வாட்டர் பாட்டில் இனி ரூ 10க்கு கிடைக்கும் என்றார்.

ALSO READ:  சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

முன்னதாக விழாவில் பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பெற்ற தாய் போல அனைத்து நலத்திட்ட உதவிகளையும் கொடுத்தவர் தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆனால் அம்மா நம்மிடையே தற்போது இல்லாத நிலையில், நமது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அம்மா வழியில் ஆட்சி நடத்தி வருகின்றனர். இனி என்ன செய்ய வேண்டுமென்கின்ற வகையில் பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகின்றார்

உடலில் ஊனம் இருந்து பிறப்பவர்கள் தங்களது சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை, பூர்த்தி செய்து கொள்ளும் அளவிற்கும், ஏராளமான திட்டங்களை தீட்டி, அவர்கள் ஆரம்பக காலத்தில் பள்ளி படித்தும், கல்லூரி படிக்கும் பருவத்திலும், பணிக்கு செல்லும் காலத்திலும் அனைத்து விதமான திட்டங்களை தீட்டி, இந்தியாவிலேயே முன்னோடு மாநிலமாக்கியதோடு, இன்றுவரை பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்து வருகின்றார் என்றார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி உள்ளிட்டோர் உடனிந்தனர்.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories