சந்திரபாபு நாயுடுவுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! வீட்டை இடிக்கும் ஜெகன்!

Published:

IMG 20190629 WA0036 - 2026

சந்திரபாபு நாயுடுவை ஒரு வாரத்திற்குள் வீட்டை காலி செய்யச் சொல்லி வீட்டுச் சுவரில் நோட்டீஸ் ஒட்டியது ஜகன் அரசு.

சந்திரபாபு நாயுடு வசித்துவரும் வீட்டின் மீது சி ஆர் டி ஏ அதிகாரிகள் “லிங்க மனேனி ரமேஷ்’ பெயரில் நோட்டீஸ் ஒட்டி உள்ளார்கள். ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கும்படியும் இல்லாவிடில் காலி செய்யும்படியும் அதில் உள்ளது.

‘லிங்கமனேனி ரமேஷ்’ என்பவரின் கெஸ்ட் ஹவுசில் தான் நாயுடுகாரு வசித்து வருகிறார். தலைநகர் அமராவதியில் இதுவரை அவர் சொந்த வீடு கட்டிக் கொள்ளவில்லை. எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசாங்கம் வீடு ஒதுக்கும் வரை வேறு வீட்டில் தங்குவதற்காக வீடு தேடிவருகிறார்.

IMG 20190629 WA0037 - 2026ஆந்திர சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தோல்வியடைந்தார். ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைக் கைப்பற்றி உள்ளார்.

இந்நிலையில் ஆந்திர பிரதேசத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதில் ஒரு அம்சமாக சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் கிருஷ்ணா ஆற்றுப் படுகையில் சுமார் 9 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பிரஜா வேதிகா என்ற பிரம்மாண்டமான அரங்கத்தை இடிப்பதற்கு முதலமைச்சர் ஜெகன் உத்தரவு பிறப்பித்தார்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

இதனை இடிக்கும் பணி கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதை தொடர்ந்து அந்த அரங்கத்தை ஒட்டி அமைந்துள்ள சொகுசு பங்களாவையும் இடிப்பதற்காக ஆந்திரா அரசு நேற்று நோட்டீஸ் ஒட்டியது.

பங்களாவின் உரிமையாளர்  ரமேஷ் இல்லாத நிலையில் வீட்டின் கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

கிருஷ்ணா ஆற்றுப் படுகையில் ஆறு ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட இந்த பங்களாவை சந்திரபாபு நாயுடு குத்தகைக்கு எடுத்து தங்கினார் …

இந்த பங்களா சட்ட அனுமதி இன்றியும் விதிகளை மீறியதாகவும் கட்டப்பட்டு இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து இந்த பங்களாவை இடிப்பதற்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இது ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img