கட்டாய திருமணம்; கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை…..!

KARLINMERY - 2026

திருவொற்றியூர் டோல்கேட் என்.டி.ஓ.குப்பம் அருகில் உள்ள கடற்கரையில் அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டு இருந்த இளம்பெண் ஒருவர், திடீரென கடலரிப்பு தடுப்பு சுவர் மீது நடந்து சென்று கடலில் குதித்தார்.

இதுபற்றி கன்டெய்னர் லாரி டிரைவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மீனவர்கள் உதவியுடன் கடலில் குதித்த இளம்பெண்ணை போலீசார் தேடினர்.

ஆனால் 1 மணி நேரத்திற்கு பிறகு புதுவண்ணாரப்பேட்டை எஸ்.என்.செட்டி சாலை எதிரில் உள்ள கடற்கரையில் இளம்பெண்ணின் உடல் கரை ஒதுங்கியது.

அவர் யார்?, எந்த ஊர்?, எதற்காக தற்கொலை செய்தார்? என காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்

இந்த நிலையில் மணலி போலீஸ் நிலையத்தில் தனது பேத்தியை காணவில்லை என்று முதியவர் ஒருவர் புகார் கொடுத்தார்.

இதையடுத்து போலீசார், முதியவர் மற்றும் அவரது உறவினர்களை அழைத்துச்சென்று ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணின் உடலை காட்டினர்.

அதைப்பார்த்த அந்த பெண்ணின் தாத்தா, அவர் காணாமல் போன தனது பேத்தி கர்லின் மேரி (வயது 17) என்று கூறி கதறி அழுதார். அவரிடம் போலீசார் மேலும் விசாரித்தனர்.

அதில், மணலி சன்னதி தெருவில் வசித்து வந்த கர்லின் மேரியின் தந்தை விக்டர் ஆமோஸ் லேசான மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இதனால் கர்லின் மேரியின் தாய், 10 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். தற்போது கர்லின் மேரி மற்றும் அவரது தம்பி மனோவா பிரான்சிஸ் இருவரையும் காவலாளி வேலை பார்த்து வரும் தாத்தா ஜெயசீலன்தான் படிக்க வைத்து வந்தார்.

தற்போது திருவொற்றியூர் மாட்டுமந்தை அருகேயுள்ள தனியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ கம்யூட்டர் சயின்ஸ் படித்து வந்த மாணவி கர்லின் மேரியை தொடர்ந்து படிக்க வைக்க முடியாததால் படிப்பை நிறுத்திவிட்டு திருமணம் செய்துகொள்ளும்படி உறவினர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கர்லின் மேரி, கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு கர்லின்மேரியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Entertainment News

Popular Categories