February 22, 2026, 4:00 PM
30.4 C
Chennai

ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி ஞாயிறு காலை ஆர்ப்பாட்டம்!

hindu munnani - 2026

ஆலய தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யவும், அரசின் பிடியிலிருந்து ஆலயத்தை மீட்கவும் மாநிலம் தழுவிய அளவில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகக் கூறியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு தெரிவித்த தகவலில், மதச் சார்பற்ற அரசு என்று கூறிக் கொண்டு, இந்து ஆலயங்களை தன் கைப்பிடிக்குள் வைத்து, அதனை சீரழித்து வருகிறது அரசு. ஒவ்வொரு கோயிலிலும் விதம் விதமாக ஆலய தரிசன கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஏழை எளிய பக்தர்கள் கேவலப் படுத்தப் படுகிறார்கள். இத்தகைய பொருளாதார தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும். இதற்காக, இந்து முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 14ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், ஆன்மிக அமைப்புகளையும், பக்தர்களையும் ஒருங்கிணைத்து இந்து முன்னணி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறது.

இந்துக்களின் உணர்வுகளை உணர்ந்து, தமிழக அரசு இந்து ஆன்மிகவாதிகள் தலைமையில் ஒரு குழு அமைத்து, தனி அதிகாரம் உள்ள வாரியத்திடம் ஆலய நிர்வாகத்தை ஒப்படைக்கக் கோருக்கிறோம்.

சென்னையில் மூன்று மாவட்டங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். 14.7.2019 ஞாயிறு, காலை 10 மணி அளவில், வடசென்னையில் மாநில செயலாளர் மணலி த. மனோகரன் தலைமையில் மாதவரம் நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெறும்.

மத்திய சென்னையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், மாநகரத் தலைவர் ஏ.டி. இளங்கோவன் தலைமையிலும்,

தென் சென்னை பகுதியில், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே, இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் வீரத்துறவி இராம கோபாலன் தலைமையிலும் நடைபெறும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர, மாவட்ட, தொகுதி, வட்ட பொறுப்பாளர்கள், தொண்டர்கள், இந்து அன்னையர் முன்னணி, இந்து வழக்கறிஞர் முன்னணி, இந்து இளைஞர் முன்னணி பொறுப்பாளர்களும், பொதுமக்களும், ஆன்மிக அமைப்பைச் சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்துகொள்ள இருக்கிறார்கள்… என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories