February 22, 2026, 8:26 AM
26.1 C
Chennai

நெல்லை மேலப்பாளையத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை!

nellai nia search - 2026

திருநெல்வேலி, மேலப்பாளையம் பகுதியில் தேசியப் புலனாய்வுப் பிரிவு, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

வெளிநாடுகளில் இருந்தபடி பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதாக வந்த தகவலை அடுத்து தமிழகத்தில் சென்னை, கோவை, நாகை உள்ளிட்ட இடங்களில் சில தினங்களுக்கு முன்னர் தேசிய புலனாய்வு முகமை – என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் வளைகுடா நாடுகளில் தங்கியிருந்து, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டி, நாடு கடத்தப் பட்ட 14 பேரை கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும், வாட்ஸ் அப் குழு மூலம் தகவல் பரிமாறி, வாட்ஸ் அப் வீடியோ காலிங் மூலம் இணைப்பில் இருந்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் அனைவரும் தடை செய்யப் பட்ட அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதை அடுத்து இந்த அமைப்பில் தொடர்புடையவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் உள்ளூர் போலீஸாரும் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை, தேனி, ராமநாதபுரம் கீழக்கரை, நெல்லை மேலப்பாளையம் கொட்டிக்குளம் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, நேற்று பயங்கரவாதிகளுக்கு நிதி வசூல் செய்ததாக மதுரை நரிமேடு பகுதியி  அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு பணம் திரட்டியதாக கைது செய்யப்பட்ட 14 பேரில் ஒருவரான முகமது ஷேக் மைதீன் என்பவரின் மதுரை வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

nia - 2026சென்னை, மதுரை நாகை, கோவை மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் துபையில் பணிபுரிந்தபடி வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டி ஆட்களை சேர்த்தனர். அவர்களை துபை போலீசார் இந்தியாவுக்கு நாடு கடத்தினர். தில்லி வந்த 14 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் சென்னை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது கைதானவர்களில் ஒருவரான மதுரை நரிமேடு முஹம்மது ஷேக் மைதீன் என்பவரின் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டன. என் ஐ ஏ அதிகாரிகள் நேற்று மதுரை வந்து அவரது வீட்டில் சில மணி நேரம் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை எடுத்துச்  சென்றனர். தொடர்ந்து, கைதான 14 பேர் வீடுகளில் மற்றும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories