நெல்லை மேலப்பாளையத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை!

nellai nia search - 2026

திருநெல்வேலி, மேலப்பாளையம் பகுதியில் தேசியப் புலனாய்வுப் பிரிவு, என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

வெளிநாடுகளில் இருந்தபடி பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதாக வந்த தகவலை அடுத்து தமிழகத்தில் சென்னை, கோவை, நாகை உள்ளிட்ட இடங்களில் சில தினங்களுக்கு முன்னர் தேசிய புலனாய்வு முகமை – என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின்னர் வளைகுடா நாடுகளில் தங்கியிருந்து, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டி, நாடு கடத்தப் பட்ட 14 பேரை கைது செய்தனர்.

இவர்கள் அனைவரும், வாட்ஸ் அப் குழு மூலம் தகவல் பரிமாறி, வாட்ஸ் அப் வீடியோ காலிங் மூலம் இணைப்பில் இருந்தது தெரியவந்தது. மேலும், இவர்கள் அனைவரும் தடை செய்யப் பட்ட அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதை அடுத்து இந்த அமைப்பில் தொடர்புடையவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் உள்ளூர் போலீஸாரும் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று காலை, தேனி, ராமநாதபுரம் கீழக்கரை, நெல்லை மேலப்பாளையம் கொட்டிக்குளம் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

முன்னதாக, நேற்று பயங்கரவாதிகளுக்கு நிதி வசூல் செய்ததாக மதுரை நரிமேடு பகுதியி  அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

பயங்கரவாத அமைப்புகளுக்கு பணம் திரட்டியதாக கைது செய்யப்பட்ட 14 பேரில் ஒருவரான முகமது ஷேக் மைதீன் என்பவரின் மதுரை வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

nia - 2026சென்னை, மதுரை நாகை, கோவை மாவட்டங்களைச் சேர்ந்த சிலர் துபையில் பணிபுரிந்தபடி வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டி ஆட்களை சேர்த்தனர். அவர்களை துபை போலீசார் இந்தியாவுக்கு நாடு கடத்தினர். தில்லி வந்த 14 பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் சென்னை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது கைதானவர்களில் ஒருவரான மதுரை நரிமேடு முஹம்மது ஷேக் மைதீன் என்பவரின் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டன. என் ஐ ஏ அதிகாரிகள் நேற்று மதுரை வந்து அவரது வீட்டில் சில மணி நேரம் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை எடுத்துச்  சென்றனர். தொடர்ந்து, கைதான 14 பேர் வீடுகளில் மற்றும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories