December 5, 2025, 6:09 PM
26.7 C
Chennai

விசிக., பிரமுகர் ஓட ஓட விரட்டிக் கொலை: கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!

arival attack - 2025நாகர்கோவில் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலைசெய்யப் பட்டார். மோட்டார் சைக்கிளை வழிமறித்து தீர்த்துக்கட்டிய கும்பலை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

நாகர்கோவில் அருகே சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த பயங்கர கொலை குறித்து கூறப் படுவதாவது…

நாகர்கோவில் அருகே பறக்கை மாவிளை காலனியைச் சேர்ந்தவர் புஷ்பாகரன் (வயது 40). கூலித் தொழிலாளியான இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.

இவர் நேற்று மதியம் பறக்கையில் இருந்து என்.ஜி.ஓ.காலனிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 5 பேர் கும்பல் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரை பின் தொடர்ந்தது. சி.டி.எம்.புரம் பகுதியில் வந்த போது புஷ்பாகரன் மோட்டார் சைக்கிளை அந்த கும்பல் வழிமறித்தது.

NAGRKOVIL KOLI - 2025இதைக் கண்டு திடுக்கிட்ட புஷ்பாகரன், மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். அந்த கும்பலும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு புஷ்பாகரனை விரட்டியது. புஷ்பாகரன் உயிரை காப்பாற்றிக்கொள்ள தலைதெறிக்க ஓடினார். ஆனாலும் கும்பல் அவரை விடவில்லை. ஓட ஓட விரட்டி வெட்டியது.

அங்குள்ள சிறிய தெருவுக்குள் புஷ்பாகரன் ஓடினார். தெரு முடிவில் எங்கும் செல்ல வழிஇல்லாமல் அப்படியே நின்று விட்டார். கொலை கும்பல் புஷ்பாகரனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.

சுவரில் சாய்ந்தபடியே புஷ்பாகரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 5 பேரும் தங்கள் கொண்டு வந்த வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை அங்கேயே போட்டு விட்டு சாவகாசமாக அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சினிமாவை போல் நடந்த இந்த கொலை சம்பவம் கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து முடிந்தது. கொலை நடந்த தகவல் காட்டுத்தீ போன்று அந்த பகுதியில் பரவியது. அங்குள்ள பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன் (சுசீந்திரம்), முத்து (கன்னியாகுமரி), சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகன், அஜ்மல் ஜெனிப், சாம்சன் ஜெபதாஸ், பிரசன்னகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலையான புஷ்பாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

NAGAR 2 - 2025இந்த கொலை தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில்… புஷ்பாகரனின் அண்ணன் மகன் விக்கி, இவர், கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி பறக்கை ஏழாங்குடி தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரசன்னாவின் தங்கை மீது மோட்டார் சைக்கிள் உரசியபடி சென்றதாக தெரிகிறது.

இதனை பார்த்த பிரசன்னா, மோட்டார் சைக்கிளில் பார்த்துக் செல்லக்கூடாதா? என்று கூறி விக்கியை கண்டித்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தை விக்கி, தன்னுடைய சித்தப்பா புஷ்பாகரனிடம் கூறியுள்ளார்.

உடனே புஷ்பாகரன் தன்னுடைய இன்னொரு அண்ணன் மகன் சுமன் மற்றும் விக்கியை அழைத்துக் கொண்டு பிரசன்னாவிடம் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த இவர்கள் 3 பேரும் பிரசன்னாவை தாக்கி உள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் புஷ்பாகரன், விக்கி, சுமன் ஆகிய 3 பேர் மீதும் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே பிரசன்னாவின் தம்பி கிஷோர், நேற்று முன்தினம் விக்கியிடம் சென்று என்னுடைய அண்ணனை எப்படி தாக்கலாம் என்று கூறி தகராறு செய்துள்ளார். இதை அறிந்த புஷ்பாகரன் உள்ளிட்ட சிலர் கிஷோரை தாக்கியதாக தெரிகிறது.

NAGAR 4 - 2025இதனால் ஆத்திரம் அடைந்த கிஷோர், புஷ்பாகரனை கொலை செய்து விடுவது என்று முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று மதியம் கிஷோர் உள்ளிட்ட 5 பேர் புஷ்பாகரன் எங்கு செல்கிறார் என நோட்டமிட்டு அவரை பின்தொடர்ந்து சென்று தீர்த்துக்கட்டியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து புஷ்பாகரன் கொலை தொடர்பாக கிஷோர், அவருடைய அண்ணன் பிரசன்னா, அஜய், சஞ்சய், மாதேஷ் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். கொலை நடந்த பறக்கை பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், நகர செயலாளர் கணேஷ், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் ஜானி, கொலையான புஷ்பாகரனின் அண்ணனும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான தாமஸ் மற்றும் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் திரண்டனர்.

அப்போது, கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். புஷ்பாகரன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் புஷ்பாகரன் உடலை வாங்க மாட்டோம் என்று கூறினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories