விசிக., பிரமுகர் ஓட ஓட விரட்டிக் கொலை: கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!

arival attack - 2026நாகர்கோவில் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலைசெய்யப் பட்டார். மோட்டார் சைக்கிளை வழிமறித்து தீர்த்துக்கட்டிய கும்பலை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

நாகர்கோவில் அருகே சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த பயங்கர கொலை குறித்து கூறப் படுவதாவது…

நாகர்கோவில் அருகே பறக்கை மாவிளை காலனியைச் சேர்ந்தவர் புஷ்பாகரன் (வயது 40). கூலித் தொழிலாளியான இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.

இவர் நேற்று மதியம் பறக்கையில் இருந்து என்.ஜி.ஓ.காலனிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 5 பேர் கும்பல் வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவரை பின் தொடர்ந்தது. சி.டி.எம்.புரம் பகுதியில் வந்த போது புஷ்பாகரன் மோட்டார் சைக்கிளை அந்த கும்பல் வழிமறித்தது.

NAGRKOVIL KOLI - 2026இதைக் கண்டு திடுக்கிட்ட புஷ்பாகரன், மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். அந்த கும்பலும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு புஷ்பாகரனை விரட்டியது. புஷ்பாகரன் உயிரை காப்பாற்றிக்கொள்ள தலைதெறிக்க ஓடினார். ஆனாலும் கும்பல் அவரை விடவில்லை. ஓட ஓட விரட்டி வெட்டியது.

அங்குள்ள சிறிய தெருவுக்குள் புஷ்பாகரன் ஓடினார். தெரு முடிவில் எங்கும் செல்ல வழிஇல்லாமல் அப்படியே நின்று விட்டார். கொலை கும்பல் புஷ்பாகரனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.

சுவரில் சாய்ந்தபடியே புஷ்பாகரன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய 5 பேரும் தங்கள் கொண்டு வந்த வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை அங்கேயே போட்டு விட்டு சாவகாசமாக அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சினிமாவை போல் நடந்த இந்த கொலை சம்பவம் கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்து முடிந்தது. கொலை நடந்த தகவல் காட்டுத்தீ போன்று அந்த பகுதியில் பரவியது. அங்குள்ள பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன் (சுசீந்திரம்), முத்து (கன்னியாகுமரி), சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெகன், அஜ்மல் ஜெனிப், சாம்சன் ஜெபதாஸ், பிரசன்னகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலையான புஷ்பாகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

NAGAR 2 - 2026இந்த கொலை தொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில்… புஷ்பாகரனின் அண்ணன் மகன் விக்கி, இவர், கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி பறக்கை ஏழாங்குடி தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரசன்னாவின் தங்கை மீது மோட்டார் சைக்கிள் உரசியபடி சென்றதாக தெரிகிறது.

இதனை பார்த்த பிரசன்னா, மோட்டார் சைக்கிளில் பார்த்துக் செல்லக்கூடாதா? என்று கூறி விக்கியை கண்டித்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தை விக்கி, தன்னுடைய சித்தப்பா புஷ்பாகரனிடம் கூறியுள்ளார்.

உடனே புஷ்பாகரன் தன்னுடைய இன்னொரு அண்ணன் மகன் சுமன் மற்றும் விக்கியை அழைத்துக் கொண்டு பிரசன்னாவிடம் தகராறு செய்துள்ளனர். தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த இவர்கள் 3 பேரும் பிரசன்னாவை தாக்கி உள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் புஷ்பாகரன், விக்கி, சுமன் ஆகிய 3 பேர் மீதும் சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே பிரசன்னாவின் தம்பி கிஷோர், நேற்று முன்தினம் விக்கியிடம் சென்று என்னுடைய அண்ணனை எப்படி தாக்கலாம் என்று கூறி தகராறு செய்துள்ளார். இதை அறிந்த புஷ்பாகரன் உள்ளிட்ட சிலர் கிஷோரை தாக்கியதாக தெரிகிறது.

NAGAR 4 - 2026இதனால் ஆத்திரம் அடைந்த கிஷோர், புஷ்பாகரனை கொலை செய்து விடுவது என்று முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று மதியம் கிஷோர் உள்ளிட்ட 5 பேர் புஷ்பாகரன் எங்கு செல்கிறார் என நோட்டமிட்டு அவரை பின்தொடர்ந்து சென்று தீர்த்துக்கட்டியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து புஷ்பாகரன் கொலை தொடர்பாக கிஷோர், அவருடைய அண்ணன் பிரசன்னா, அஜய், சஞ்சய், மாதேஷ் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். கொலை நடந்த பறக்கை பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், நகர செயலாளர் கணேஷ், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் ஜானி, கொலையான புஷ்பாகரனின் அண்ணனும், கட்சியின் செய்தி தொடர்பாளருமான தாமஸ் மற்றும் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் திரண்டனர்.

அப்போது, கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். புஷ்பாகரன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் இல்லை என்றால் புஷ்பாகரன் உடலை வாங்க மாட்டோம் என்று கூறினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories