முதல்வரைச் சந்தித்த காவல்துறை அதிகாரிகள்!

Published:

new police officials met cm palanisamy
new police officials met cm palanisamy

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று தலைமைச் செயலகத்தில், புதிதாக நியமனம் செய்யப் பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள என்.தமிழ்செல்வன்,
காவல்துறை கூடுதல் இயக்குநர் (Operations)-ஆக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே. விஸ்வநாதன்,
சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராக (சட்டம் மற்றும் ஒழுங்கு – தெற்கு) நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஆர். தினகரன்,
சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராக (போக்குவரத்து) நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் என். கண்ணன்,
சென்னை பெருநகர காவல்துறை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள பி.சி. தேன்மொழி,
சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையராக (தெற்கு) நியமிக்கப்பட்டுள்ள ஏ.ஜி. பாபு,
சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையர் (போக்குவரத்து – மேற்கு) நியமிக்கப்பட்டுள்ள எஸ். லட்சுமி ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

Related articles

Recent articles

spot_img